மேலும் அறிய

திருவாரூர்: முத்துப்பேட்டையில்  4 ஆயிரம்  போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

கோட்டாட்சியர்  தலைமையில்  வருவாய் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பகுதியில் 112 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டிருந்தது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  விநாயகர் ஊர்வலம்   நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் முத்துப்பேட்டையில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஊர்வலம் என்பது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது மிக அதிக பாதுகாப்புடன் தமிழகத்தில் நடைபெறும் ஊர்வலம் என்றால் மிகையாகாது. தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலமாக இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த ஊர்வலம் என்பது  ஜாம்பவானோடை சிவன் கோயில் அருகில் இருந்து தொடங்கியது. மேலும் சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவனர் திருமாறன், இந்துமுன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன்,பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். 


திருவாரூர்: முத்துப்பேட்டையில்  4 ஆயிரம்  போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

அதனைத் தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இடையில் ஆங்காங்கு இருந்தபடி கலந்து கொண்டன. மேலும் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரையாற்றுபாலம் பகுதி வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமனி ஆற்றில்  கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்துக்காக கடந்த ஒரு வார காலமாக போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணிகளை செய்து வைத்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்த விநாயகர் சதுர்த்தி உருவத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் சுமார் 112 தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் கொடி அணிவகுப்பும் விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் நடத்தப்பட்டது. 


திருவாரூர்: முத்துப்பேட்டையில்  4 ஆயிரம்  போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்

தொடர்ந்து இன்று நடைபெற்ற ஊர்வலத்தின்போது, வஜ்ரா வாகனங்களும் விநாயகர் ஊர்வலத்தில் அணிவகுத்து வந்தன.திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ் குமார் மேற்பார்வையில், திருச்சி டிஐஜி சரவணன், தஞ்சை டிஐஜி கயல்விழி ஆகியோரின் வழிகாட்டலில் திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார் குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் திருச்சி, புதுக்கோட்டை, பெரும்பலூர், கரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 9 எஸ்பிகள், 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள், நூறுக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4000 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுபோல், மன்னார்குடி கோட்டாட்சியர்  தலைமையில்  வருவாய் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பகுதியில் 112 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை லகூன் அலையாத்தி காடுகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும்  கண்காணிப்புகள் செய்யப்பட்டன. இறுதியாக இந்த விநாயகர் சதுரவமாக செம்படவன் காடு பகுதியை அடைந்தது அதன் தொடர்ந்து சம்பவம் கார்டில் காமெடி ஆற்றில் இந்த 19 ஜனவரி சிலைகளும் கரைக்கப்பட்டன.இந்த ஊர்வலம் நிறைபெற்ற இடமான செம்பவன்காடில்  நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இந்த விநாயகர் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் 4000  காவல்துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

யானை முன்னே செல்ல, பச்சைக்காளி பவளக்காளி ஆட... மயிலாடுதுறையை ஸ்தம்பிக்க வைத்த 45-வது ஆண்டு பால்குட திருவிழா!
யானை முன்னே செல்ல, பச்சைக்காளி பவளக்காளி ஆட... மயிலாடுதுறையை ஸ்தம்பிக்க வைத்த 45-வது ஆண்டு பால்குட திருவிழா!
படித்துறை ஆஞ்சநேயர் கோவில் டூ பத்திரகாளி அம்மன் கோயில்: சீர்காழியில் ஸ்தம்பித்த முக்கிய வீதிகள்... என்ன காரணம்?
படித்துறை ஆஞ்சநேயர் கோவில் டூ பத்திரகாளி அம்மன் கோயில்: சீர்காழியில் ஸ்தம்பித்த முக்கிய வீதிகள்... என்ன காரணம்?
சனியின் கடுமை குறைந்து செல்வம் பொங்க அருள்புரியும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!
சனியின் கடுமை குறைந்து செல்வம் பொங்க அருள்புரியும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
Embed widget