![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..!
Lord Murugan : திருப்போரூர் கந்தசாமி கோவில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
![திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..! tiruporur Kandasamy Temple Kanda Shasti Lakshasana festival started with flag hoisting. A large number of devotees attended and worshiped Lord Murugan திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/59cf4e463273bd1c5b01379e167abf441699845957978113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கந்த புராணம்:
கந்த புராணத்தின் படி, ஒரு காலத்தில் சூரபத்மன், சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் வான தேவதைகளுக்கு பெரும் தொல்லைகளை ஏற்படுத்தினார்கள். அவர்களை அழிக்க சண்முக பகவான் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து அவதாரம் எடுத்தார். முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் இருந்து வேல் ஆயுதத்தை (ஈட்டி ஆயுதம்) ஏற்றுக்கொண்டு, வீரபாகு தேவர் மற்றும் பிற தேவர்களுடன் சூரபத்மன் மற்றும் அவனது அரக்கர் படையுடன் போரிட திருச்செந்தூருக்கு சென்றார்.
போரின்போது முருகப்பெருமான் சிங்கமுகசுரத்தை சக்தி தேவியின் வாகனமாக மாற்றினார். சூரபத்மன் சண்டையிட்டுக் கொண்டு கடல் அடியில் மாமரமாக ஒளிந்து கொண்டு தப்பிக்க முயன்றான். முருகப்பெருமான் மாமரத்தைப் பிளந்து ஒரு பாதியை மயில் வாகனமாகவும், மற்றொரு பாதியை சேவல் கொடியாகவும் மாற்றினார். அசுரர்களை அழித்ததற்கும், தேவர்களை விடுவித்ததற்கும் பலனாக ஆண்டுதோறும் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள்.
![திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/b15fb1590be8685ea075eae18922d24e1699845926782113_original.jpg)
![திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/59cf4e463273bd1c5b01379e167abf441699845957978113_original.jpg)
![திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/cd1baa39f25c4123bf1ee96f60cfbd491699845984644113_original.jpg)
கந்த சஷ்டி எப்போது ? எந்தெந்த தினத்தில் என்னென்ன விசேஷம் ?
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை தினத்தில் கந்த சஷ்டி தொடங்குகிறது.
நவம்பர் 13 ( திங்கட்கிழமை) – கந்த சஷ்டி விழா தொடக்கம்
நவம்பர் 14 ( செவ்வாய்) - முருகப்பெருமான் வேல் வாங்குதல்
நவம்பர் 15 ( புதன்) - சூரபத்மனுக்கு தூது விடுதல்
நவம்பர் 16 (வியாழன் ) - சூர்பத்மனுடான போர் தொடங்குதல்
நவம்பர் 18 ( சனி) - சூரசம்ஹாரம்
நவம்பர் 19 ( ஞாயிறு) - திருக்கல்யாணம்
லட்சார்ச்சனை என்றால் என்ன ?
நூறாயிரம் அர்ச்சனை என்பதே லட்சார்ச்சனை என்றும், சத சஹஸ்ர அர்ச்சனை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக, கோயில்களில் வருஷத்துக்கு ஓரிருமுறை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)