மேலும் அறிய

Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?

திருப்பதி ஏழுமலை கோயிலில் வி.ஐ.பி. தரிசனம் உள்பட அனைத்து தரிசனமும் நாளை நான்கு மணி நேரம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி கோயில் ஆகும். இந்தியாவின் பணக்கார கோயிலாக கருதப்படும் திருப்பதியில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் வழக்கத்தை விட அதிகளவிலான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

வைணவ தலங்களில் புரட்டாசி பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நாளை மறுநாள் ( அக்டோபர் 2ம் தேதி) முதல் அக்டோபர் 12ம் தேதி  வரை நடத்தப்படும். திருப்பதியைப் பொறுத்தவரை கோயிலில் முக்கிய விழாக்கள் நடைபெறுவதற்கு முன்பு கோயிலில் தூய்மைப்படுத்தி, கோயிலில் உள்ள தெய்வங்களை புனிதப்படுத்தும் பணியைச் செய்வார்கள். இதற்கு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று பெயர். இந்த தருணத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தின்போது கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்கள், சிற்பங்கள், பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் புனித நீரால் சுத்தம் செய்யப்படும். இதை பரிமளம் என்று கூறுவார்கள். புரட்டாசி பிரம்மோற்சவம் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளதால் திருப்பதியில் நாளை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.

இதன் காரணமாக திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்பட உள்ளது. கோயிலை சுத்தம் செய்வதற்கான பூஜை என்பதால் விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, சிபாரிசு கடிதத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்படும் என்று தேவாஸ்தானம் அறிவித்துள்ளது.

நாளை நான்கு மணி நேரத்திற்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதால், பக்தர்கள் அதற்கு ஏற்றாற்போல தங்கள் சாமி தரிசன திட்டத்தை முடிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சனமானது புனித நீராட்டுதல் வைபவம் யுகாதி, ஆனிவார அஸ்தனம், வைகுண்ட ஏகாதசி, வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய நான்கு வைபவங்கள் தொடங்குவதற்கு முன்பு வரும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படுவது வழக்கம்.

நாளை செவ்வாய் கிழமை என்பதாலும், நாளை மறுாள் புரட்டாசி பிரம்மோற்சவம் தொடங்க இருப்பதாலும் நாளை கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தின்போது கோயில் முழுவதும் தெளிக்கப்படும். இந்த  புனித நீரானது கற்பூரம், சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ ஆகியவை கலந்த வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டது. இந்த புனித நீரால் அனைத்து இடங்களும் தூய்மை செய்யப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Embed widget