மேலும் அறிய

உள்ளே இருக்காரு அவரு? நீயோ, நானே பெரிய ஆள் இல்ல: விரல் உயர்த்தி சொல்லாமல் சொல்லும் துவாரபாலகர்

கோயிலுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் தான்தான் பெரியவர் என்ற எண்ணத்தை கொண்டு இருக்கக்கூடாது. உள்ளே அவர் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லும் செய்தியை துவார பாலகர் விளக்குகிறார். 

தஞ்சாவூர்: கோயிலுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் தான்தான் பெரியவர் என்ற எண்ணத்தை கொண்டு இருக்கக்கூடாது. உள்ளே அவர் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லும் செய்தியை துவார பாலகர் விளக்குகிறார் 

என்றும், என்றென்றும் தஞ்சை பெரிய கோயில் ஆச்சரியத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும். எவ்வித தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்தில் மிக பிரமாண்டமாக இந்த கோயிலை கட்டியது எப்படி என்ற வியப்பு அனைவருக்கும் ஏற்படும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம்

தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுத்து வழிபட்டார். அவரது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றினர்.

மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் பிரமாண்டமான கோயில் கட்டி அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூரும், வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியங்களையும் அதிசயங்களை கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.


உள்ளே இருக்காரு அவரு? நீயோ, நானே பெரிய ஆள் இல்ல: விரல் உயர்த்தி சொல்லாமல் சொல்லும் துவாரபாலகர்

தெளிவான திறமையும், ஆன்மீக அறிவும் கொண்ட நம் முன்னோர்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் ராஜராஜன் கோபுரத்திலும், மகாமண்டபத்தின் வாயிலிலும் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஊட்டுபவை. அப்படி என்னங்க இருக்கு துவார பாலகர்கள் சிற்பங்களில் என்று எளிதாக கேள்வி வந்து விடும். ஆனால் அதற்கான பதிலில் தான் உள்ளது நமது முன்னோர்களின் தெளிவாக திறமையும், ஆன்மீக அறிவும்.

பாம்பு யானையை விழுங்கும் சிற்பம்

இந்த துவாரபாலகர்களின் சிற்பங்களின் காலடியில் ஒரு பாம்பு யானையை விழுங்கும் சிற்பம் உள்ளது. துவாரபாலகரோ ஒரு கரத்தை கதையின் மீது வைத்து ஒரு கரத்தால் தர்ஜனி என்னும் எச்சரிக்கை முத்திரை காட்டி, மேலிரு கரங்களில் ஒன்றில் ஈசன் இருக்கும் திசையைக் காட்டுவதுடன், மறுகரத்தை தலைக்குமேல் உயர்த்தி பெருவியப்பைச் சுட்டிடும் விஸ்மயம் எனும் முத்திரையைக் காட்டுகிறார்.

இச்சிற்பத்துக்கு முன் நின்றுகொண்டு அங்குக் காணும் யானையை உண்மையான யானையின் அளவாகக் கொண்டு அதே விதிதத்தில் அச்சிற்பத்தை நோக்குவோமாயின் துவாரபாலகரோ வானத்தளவு நம் கற்பனையில் தோன்றுவார் என்பதும் மிகையில்லை. அவர் மானத்தின் உள்ளே ஈசனைச் சுட்டி விஸ்மயம் எனும் பெருவியப்பைக் காட்டும்போது அங்கே பிரபஞ்சமே ஈசனாக இருப்பதை உணரலாம்.

அனைத்துக்கும் பெரியவர் ஈசன்

அதாவது யானை எவ்வளவு பெரிய விலங்கு. அதை விழுங்கும் பாம்பு அதைவிட எத்தனை பெரியதாக இருக்க வேண்டும். அவற்றை காலடியில் கொண்டு மிக பிரமாண்டமாக நிற்கும் துவாரபாலகர் எத்தனை பெரியவராக இருக்க வேண்டும். அவரோ அனைத்துக்கும் பெரியவர் ஈசன் என்று அவர் இருக்கும் திசையைக் காட்டுவதுடன், மறுகரத்தை தலைக்குமேல் உயர்த்தி பெருவியப்பைச் சுட்டிடும் விஸ்மயம் எனும் முத்திரையைக் காட்டுகிறார். இதனால் யாரும் யாரை விடவும் பெரியவர்கள் இல்லை. அதற்கு மேல் உள்ள பிரமாண்ட சக்தி ஈசன் என்று தெரிவிக்கிறார் துவாரபாலகர்.

தான்தான் பெரியவர் என்ற எண்ணம் இருக்கக்கூடாது

கோயிலுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் தான்தான் பெரியவர் என்ற எண்ணத்தை கொண்டு இருக்கக்கூடாது. உள்ளே அவர் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லும் செய்தியை துவார பாலகர் விளக்குகிறார். இப்படி நுட்பமாக நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமான அறிவை பெற்றிருந்ததை உணரலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
Embed widget