மேலும் அறிய

உலக நன்மை வேண்டி மீனாட்சியம்மன் சொக்கநாதர் ஆலயத்தில் சங்கு அபிஷேக விழா

அரவக்குறிச்சி அருகே உலக நன்மை வேண்டி ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தூப தீபங்கள் கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உலக நன்மை வேண்டி ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமத்தில் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு சங்கு அபிஷேக விழா நடைபெற்றது.


உலக நன்மை வேண்டி மீனாட்சியம்மன் சொக்கநாதர் ஆலயத்தில் சங்கு அபிஷேக விழா


 நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் 108 சங்குகளை பிரதிஷ்டை செய்து அதற்கு முன்பாக கலசங்கள் வைத்து  தீர்த்தத்தால் கலசத்தை நிரப்பி பின்னர் யாக வேள்வி  நடைபெற்று யாக பொருட்களால் யாக குண்டத்திற்கு பூர்ணாஹுதி நடைபெற்று பின்னர் கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.


உலக நன்மை வேண்டி மீனாட்சியம்மன் சொக்கநாதர் ஆலயத்தில் சங்கு அபிஷேக விழா

அதன்பிறகு பூஜிக்கப்பட்ட 108 சங்குதீர்த்தத்தாலும், யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கரூர் ஐயப்பா சேவா சங்க ஆலயத்தில் உள்ள ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரம்.

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக 35 ஆண்டுகளுக்கு மேல் ஆன்மீகப் பணியில் இருக்கும் ஆலயமான ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாத தீபத்திருநாளை முன்னிட்டு மூலவர் ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பிரத்யேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேர், நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற அதை தொடர்ந்து சிறப்பு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


உலக நன்மை வேண்டி மீனாட்சியம்மன் சொக்கநாதர் ஆலயத்தில் சங்கு அபிஷேக விழா

அதை தொடர்ந்து மூலவர் ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மகா தீபாரதனை கட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை தீப சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சியை காண ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆலய வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கூம்புக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அதற்கு தீ மூட்டி சிறப்பு பூஜைகள் செய்ய இருக்கின்றனர். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் வருகை தந்து சிறப்பிக்க இருப்பதால் ஆலய நிர்வாகத்தின் சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget