மேலும் அறிய

Sabarimala: பங்குனி உத்திர ஆராட்டு விழா: திறக்கப்பட்ட சபரிமலை; பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு கண்டிஷன்!

பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய  பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

 
பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய  பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.  இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 19-ந்தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று கோயில்  தேவசம்போர்டு   சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மார்ச் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பங்குனி மாதம் நடைபெறக்கூடிய பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வரும்  மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம்  5ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு முன்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த பிப்ரவரி 12-ந்தேதி திறக்கப்பட்டது, அப்போது  பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ந்தேதி நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

சிறப்பு பூஜைகள்: 

தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். 

இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோவில் பூஜை மற்றும் பிரசாததிற்கான கட்டண விபரம்

S.no

பூஜை/ பிரசாதம்

விலை பட்டியல்

1.

நெய்அபிஷேகம்: 1 தேங்காய்

 ரூ. 10

2.

அஷ்டாபிஷேகம்

ரூ. 6,000

3.

கணபதி ஹோமம்

ரூ. 375

4.

உஷ பூஜை

ரூ. 1,500

5.

நித்ய பூஜை

ரூ. 4,000

6.

பகவதி சேவை

ரூ. 2,500

7.

களபாபிஷேகம்

ரூ. 38,400

8.

படி பூஜை

ரூ. 1,37,900

9.

துலாபாரம்

ரூ. 625

10.

புஷ்பாபிஷேகம்

ரூ. 12,500

11.

அப்பம் (1 பாக்கெட்)

ரூ. 45

12.

அரவணை (1 டின்)

ரூ. 100

13.

விபூதி பிரசாதம்

ரூ. 30

14.

வெள்ளை நிவேத்தியம்

ரூ. 25

15.

சர்க்கரை பாயசம்

ரூ. 25

16.

பஞ்சாமிர்தம்

ரூ. 125

17.

அபிஷேக நெய் (100 மிலி)

ரூ. 100

18.

நவக்கிரக பூஜை

ரூ. 450

19.

ஒற்றைகிரக பூஜை

ரூ. 100

20.

மாலை/வடி பூஜை

ரூ. 25

21.

நெல்பறை

ரூ. 200

22.

மஞ்சள் பறை

ரூ. 400

23.

தங்க அங்கி சார்த்தி பூஜை

ரூ. 15,000

24.

நீராஞ்சனம்

ரூ. 125

25.

இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை

ரூ. 300

 

தலைப்பு செய்திகள்

50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget