மேலும் அறிய

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில் மாசி பெருவிழா தேரோட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்

விழுப்புரம்: மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோயில் மாசி பெருவிழா தேரோட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 1035 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 63 அடி உயரம் கொண்ட இந்த திருத்தேர் ஆண்டுதோறும் புதிய கட்டு தேர் ஆக உருவாக்கப்படும் என்பது மேல்மலையனூர் தேர் வடம் பிடித்தல் உற்சவத்தின் சிறப்பாகும்.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய மாசி பெருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. 

இந்த மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழாவின் இரண்டாம் நாளில் மயானக்கொள்ளை நிகழ்வும்,ஐந்தாம் நாளில் தீமிதி உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் இந்த மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் ஏழாம் நாளான இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தேர் வடம் பிடித்தல் உற்சவத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். அப்பொழுது செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

அதிகளவு கூட்டம் காரணமாக சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மேல்மலையனூர் மாசி பெருவிழா தேர் வடம் பிடித்தல் உற்சவத்தில் இழுக்கப்படும் தேர் ஆனது தரை முதல் கலசம் வரை 63 அடி உயரம் கொண்ட புதிய கட்டு தேர் ஆக ஆண்டுதோறும் புதியதாக உருவாக்கப்படும் என்பது மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் மாசி பெரு விழா தேரோட்டத்தின் சிறப்பாகும்.

இன்று மேல்மலையனூர் மாசி பெரு விழா தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இதேபோல் மேல் மலையனூர் பகுதியில் அமைந்துள்ள நான்கு அரசு மதுபான கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளது.

இதனிடையே மேல்மலையனூர் தேர் வடம் பிடித்தல் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணவ் ஐபிஎஸ் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பி, 24 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1035 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் வடக்கு வாசல் பகுதி, கோவில் உதவி ஆணையர் அலுவலகம் பகுதி வள்ளலார் கோயில் மற்றும் மீனவர் சமுதாய மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 மருத்துவர்கள்,10 செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் 5 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 அவசர மருத்துவ உதவி 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்களுக்கு போதுமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
பல்கேரியா டூ வைத்தீஸ்வரன் கோவில்: 13 வெளிநாட்டுப் பயணிகள் ஓம் நமச்சிவாய மந்திரம் முழங்கி தியானம்..
பல்கேரியா டூ வைத்தீஸ்வரன் கோவில்:13 வெளிநாட்டுப் பயணிகள் ஓம் நமச்சிவாய மந்திரம் முழங்கி தியானம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget