மேலும் அறிய

சீர்காழி அருகே மீண்டும் மீண்டும் கடற்கரையில் கிடைக்கும் சாமி சிலைகள்

மயிலாடுதுறை மாவட்ட சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் வெவ்வேறு நாட்களில் 5 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடத்தை அடுத்த தீவு கிராமம் கொடியம்பாளையம். அங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த  சனிக்கிழமை அதிகாலை அப்பகுதி மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் கிடந்துள்ளது. அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புதுப்பட்டினம் காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர்.


சீர்காழி அருகே மீண்டும் மீண்டும் கடற்கரையில் கிடைக்கும் சாமி சிலைகள்

தகவலின் பேரில் உடனடியாக சம்பவம் இடத்திற்கு புதுப்பட்டினம் காவல்துறையினர் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். தொடர்ந்து சிலை எவ்வாறு அங்கு வந்தது? சிலை எந்த கோயிலை சேர்ந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் மீண்டும்  இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் கிடப்பதாக அக்கிராம மக்கள் தகவல் அளித்தனர்.

Karnataka Election: 189 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.. எதிர்பார்ப்பை தூண்டும் கர்நாடக தேர்தல் களம்..


சீர்காழி அருகே மீண்டும் மீண்டும் கடற்கரையில் கிடைக்கும் சாமி சிலைகள்

தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் காவல்துறையினர்  அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள்  குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள் , துவாரபாலகர் , சிம்மவாகனி என தெரியவந்தது, மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து  இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும்  காவல்துறையினர் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

World Cup 2023: சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்ததா பாகிஸ்தான்..? நெருங்கும் உலகக்கோப்பை.. முடிவு என்ன?


சீர்காழி அருகே மீண்டும் மீண்டும் கடற்கரையில் கிடைக்கும் சாமி சிலைகள்

பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள்? இதில் சிலை கடத்தல் காரர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mumbai Summer Spots : சம்மர் ஹாலிடேஸ் கிடைக்குது.. டூர் ப்ளான் பண்றீங்களா? மும்பையில் இருக்கு சூப்பர் ஸ்பாட்ஸ்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Embed widget