மேலும் அறிய

மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

கொள்ளிடம் அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.   

கொள்ளிடம் அடுத்த மாதானம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.  

மாதானம் முத்து மாரியம்மன் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயில். இங்கு நூறாண்டுகளுக்கு முன்பு துண்டு துண்டுகளாக வெட்டி போடப்பட்ட புளிய மரங்கள் மீண்டும் துளிர்த்து மரமாக வளர்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அங்கு முத்துமாரியம்மன் தோன்றியதாக கருதி இன்றும் கம்பீரமாக காட்சி அந்த புளிய மரத்தினை கோயிலின் தல விருட்சமாக வணங்கி வருகின்றனர்.

மேலும் இக்கோயில் பக்தர்களின் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆகையால் இங்கு திருவிழா காலம் மட்டும் இன்றி நாள்தோறும் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

ஆண்டு தீமிதி உற்சவம் 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஆண்டு திமிதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீமிதி திருவிழா கடந்த 7 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெற்றது.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

தமிழகத்தில் மற்ற அம்மன் கோயில்களில் இல்லாத ஒன்று 

இக்கோயில் தீமிதி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் இங்கு நடைபெறும் தீமிதி திருவிழாவில் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

50 ஆயிரம் பக்தர்கள் 

தொடர்ந்து விரதம் இருந்து காப்பு கட்டிக் கொண்ட சுமார் 5000 -த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள புது மண்ணி ஆற்றில் நீராடி சக்தி கரகம் முன்னே செல்ல காவடி, பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், கால், கை உள்ளிட்ட உருவபொம்மைகளை வாங்கி வைத்தும், கண்ணடக்கம் செலுத்தியும், மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்து, சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தருமைஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் வருவாய் துறை காவல் துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் சீர்காழி, புதுப்பட்டினம் மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி சிதம்பரம் மற்றும் சீர்காழியில் இருந்து மாதானத்திற்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் நடராஜன் மற்றும் விழா குழுவினர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
Embed widget