மேலும் அறிய

மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

கொள்ளிடம் அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.   

கொள்ளிடம் அடுத்த மாதானம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.  

மாதானம் முத்து மாரியம்மன் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயில். இங்கு நூறாண்டுகளுக்கு முன்பு துண்டு துண்டுகளாக வெட்டி போடப்பட்ட புளிய மரங்கள் மீண்டும் துளிர்த்து மரமாக வளர்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அங்கு முத்துமாரியம்மன் தோன்றியதாக கருதி இன்றும் கம்பீரமாக காட்சி அந்த புளிய மரத்தினை கோயிலின் தல விருட்சமாக வணங்கி வருகின்றனர்.

மேலும் இக்கோயில் பக்தர்களின் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆகையால் இங்கு திருவிழா காலம் மட்டும் இன்றி நாள்தோறும் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

ஆண்டு தீமிதி உற்சவம் 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஆண்டு திமிதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீமிதி திருவிழா கடந்த 7 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெற்றது.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

தமிழகத்தில் மற்ற அம்மன் கோயில்களில் இல்லாத ஒன்று 

இக்கோயில் தீமிதி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் இங்கு நடைபெறும் தீமிதி திருவிழாவில் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

50 ஆயிரம் பக்தர்கள் 

தொடர்ந்து விரதம் இருந்து காப்பு கட்டிக் கொண்ட சுமார் 5000 -த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள புது மண்ணி ஆற்றில் நீராடி சக்தி கரகம் முன்னே செல்ல காவடி, பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், கால், கை உள்ளிட்ட உருவபொம்மைகளை வாங்கி வைத்தும், கண்ணடக்கம் செலுத்தியும், மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்து, சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தருமைஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் வருவாய் துறை காவல் துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மாதானம் முத்துமாரி.. அம்மன் கோயில்களில் இல்லாத நிகழ்வு.. தீமிதித்த 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்..

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் சீர்காழி, புதுப்பட்டினம் மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி சிதம்பரம் மற்றும் சீர்காழியில் இருந்து மாதானத்திற்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் நடராஜன் மற்றும் விழா குழுவினர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget