மேலும் அறிய

வேல் வடிவில் உருவான வேல்முருகன் ஆலயம் - கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பரவசம்...!

சீர்காழியில் வேல் வடிவ வடிவமைக்கப்பட்ட வேல்முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில் உள்ள மார்கோனி மந்திராலயா கார்டனில், புதிதாக வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைப் பூஜைகள்

ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தன. குறிப்பாக, ஆலயத்தின் புனிதத்தன்மையையும், தெய்வீக ஆற்றலையும் மேம்படுத்தும் வகையில், சிறப்பு யாகசாலை பூஜைகள் கடந்த 11 -ஆம் தேதி முதல் தொடங்கியது. ஆலய வளாகத்தில் ஆறு குண்டங்கள் கொண்ட பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது. இதில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மற்றும் மூல மந்திர ஹோமங்கள் என பல்வேறு வகையான ஹோமங்கள் நடத்தப்பட்டன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, ஹோமத்தில் சிறப்பு மூலிகைகள், வாசனைப் பொருட்கள், மற்றும் மலர்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த யாகசாலைப் பூஜைகளின்போது, புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் யாகசாலையில் அமர்ந்து, புனித மந்திர ஒலிகளைக் கேட்டு ஆன்மிக அனுபவத்தைப் பெற்றனர்.


வேல் வடிவில் உருவான வேல்முருகன் ஆலயம் - கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பரவசம்...!

வேல் வடிவ ஆலயத்தின் சிறப்பு

இப்பகுதியில் அமைக்கப்பட்ட மற்ற ஆலயங்களிலிருந்து தனித்து நிற்கும் வகையில், இந்த ஸ்ரீ வேல்முருகன் ஆலயம் ஒரு பிரமாண்டமான வேல் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேல் என்பது முருகப்பெருமானின் முதன்மை ஆயுதமாகவும், ஞானத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு, முருகப்பெருமானின் சக்தி மற்றும் ஞானத்தை உணர்த்துவதுடன், பக்தர்களுக்கு ஒரு வித்தியாசமான ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது.


வேல் வடிவில் உருவான வேல்முருகன் ஆலயம் - கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பரவசம்...!

கோவில் கோபுரத்தின் உச்சியில் கலசம் அமைந்திருந்தாலும், அதன் மொத்த வடிவமைப்பு வேலின் வடிவில் இருப்பது தனிச்சிறப்பு. வேலின் முனைப் பகுதியில் கலசம் அமைக்கப்பட்டு, அடியில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இது, முருகப்பெருமானின் திருவருளை நேரடியாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகா கும்பாபிஷேக வைபவம்

இன்று நான்காம் மற்றும் இறுதி கால யாகசாலை பூஜைகள் அதிகாலையிலேயே தொடங்கின. ஹோமங்கள் நிறைவு பெற்றதும், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதணை சிறப்பாக நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரம்பிய கடங்கள், மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித யாத்திரையாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோபுரக் கலசத்திற்கு புனித நீர் கொண்டு செல்லும் நிகழ்வில் பங்கேற்று, பக்திப் பரவசத்துடன் ‘அரோகரா’ கோஷம் முழங்கினர்.


வேல் வடிவில் உருவான வேல்முருகன் ஆலயம் - கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பரவசம்...!

ஊர்வலம் ஆலயத்தின் விமானத்தை அடைந்ததும், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க, கோபுரத்தின் மீது ஏறி புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, பக்தர்கள் 'வேல்முருகனுக்கு அரோகரா' என்று விண்ணதிர முழக்கமிட்டனர். மேலிருந்து பூக்கள் தூவப்பட்டு, மகா தீபாராதணை காட்டப்பட்டது. இந்த புனிதமான தருணத்தைக் காண, ஆலயத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதணை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் ஆசி

இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வு, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஆதீனம் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Embed widget