மேலும் அறிய

5 தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்.. மார்கழியில் மகாபலிபுரம் சிறப்பு என்ன ? 

Margazhi : மாமல்லபுரத்தில் நவநீத கிருஷ்ணன் கோயிலில் 5 தலைமுறையாக, பழமை மாறாமல் நடைபெற்று வரும் மார்கழி பஜனை. 

Margazhi Month 2024 - மார்கழி மாதம்: மார்கழி மாதம் என்றாலே நமக்கு நினைவு வருவது குளிர் மற்றும் பனிதான். அதேபோன்று மார்கழி மாதம் பல்வேறு கோயில் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதும் வழக்கமாக உள்ளது. மார்கழி மாதம் வந்தாலே பல்வேறு கோவில்களில் காலை வேலையில் பஜனை நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. 

நவநீதகிருஷ்ணன் கோயில்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயிலாகும். இந்த ஆலயத்தில் குடிகொண்ட கிருஷ்ணர் பல்லவர் மன்னர்கள் காலத்தில் அங்குள்ள மலை பாறைக்குன்றில் வெண்ணையை உருட்டி, திரட்டி வைத்ததாகவும், அதுவே பிற்காலத்தில் வெண்ணை உருண்டை கல் என அழைக்கப்பட்டு, தற்போது பார்வையாளர்களுக்கு அவை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 30 நாட்கள் வரை இக்கோயில் சார்பில் பஜனை நடைபெறுகிறது. காலை கடும் குளிரில் காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட மார்கழி பஜனை முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தலசயன பெருமாள் கோயில் மண்டபம், கிருஷ்ணரதம், கணேசரதம், வெண்ணை உருண்டை கல் ஆகிய இடங்களில் நின்றுபஜனை குழுவினர் ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் பாடி கிருஷ்ணரை போற்றி வணங்கினர். அப்போது சுமங்கலி பெண்கள், பக்தர்கள் பஜனை குழுவினர் கொண்டு வந்த அனையா விளக்கில் பூக்கள், சில்லரை காசுகளை காணிக்கையாக போட்டு வழிபாடு செய்தனர். சிலர் அனையா விளக்கில் எண்ணெய் ஊற்றியும் வணங்கினர்.

பஜனையில் கலந்து கொள்ளும் சிறுவர்கள்

சிறுவர்கள் தங்கள் நெற்றியில் நாமம் இட்டு பாரம்பரிய வேட்டி அணிந்து வந்து ஆர்வமாக இந்த பஜனையில் பங்கேற்றதை காண முடிந்தது. அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லும் வகையில் வைணவ மூத்த பாகவதர்கள் பாடும் ஆண்டாள் திருப்பாவை பாடலுக்கு ஏற்ப மிருதங்கம், ஆர்மோனிய பெட்டி, வெண்களதாளம் போன்ற இசை கருவிகள் மூலம் பக்தர்கள் இசைத்தனர். 

நம் பழமைகள் தற்போது ஒவ்வொன்றாக மறைந்து வருகிறது. ஆனால் மாமல்லபுரத்தில் முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை தற்போதும் இடைவிடாமல் பக்தி மனம் கமழும் வகையில் மார்கழி பஜனையை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு தலைமுறையோடு மார்கழி பஜனைகள் காணாமல் போய்விட்டன. இதில் மாமல்லபுரத்தில் இன்றளவும் தொன்றுதொட்டு பழமைமாறாமல் 5 தலைமுறையாக மார்கழி பஜனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாதம் சிறப்புகள் என்ன ?

இந்து புராண நம்பிக்கையின் அடிப்படையில் தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, மனிதர்களுக்கு ஒரு வருடம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஆடி மாதம் முதல் மார்கழி வரை தேவர்களுக்கு இரவு பொழுதாக இருக்கும் எனவும் நம்பிக்கை உள்ளது. பொதுவாக சிறந்த நேரம் என்பது பிரம்ம முகூர்த்தம் கருதப்படுகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது , மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறது. எனவே தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருக்கும் இந்த நேரம் என்பது, கடவுளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. 

காக்கும் கடவுளாக பார்க்கக்கூடிய மகாவிஷ்ணு " மாதங்களில் நான் மார்கழி" என தெரிவித்ததாக கூற்றும் இருக்கிறது. அதனால்தான் விஷ்ணு கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் மாதமாக இருந்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget