மேலும் அறிய

Diwali 2022 : தீபாவளிக்கு ரெடியாகிட்டீங்களா? இந்த ஆண்டின் தீபாவளி வாஸ்து டிப்ஸ் இதுதான்..

தீபாவளியன்று வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருகி செல்வ செழிப்பை பெற வீடு தூய்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தியாவில் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி வந்து விட்டாலே வீடுகள் தெருக்கள் கோவில்கள் என அனைத்து பகுதிகளும் ஒளி விளக்குகளால் வண்ணமயமாக காட்சியளிக்கும்.

 தீபங்களின் திருவிழாவான இந்த தீபாவளியில் அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து தமது சொந்த பந்தங்களோடு கொண்டாடுவர். ஆகவே வரவிருக்கும் தீபாவளியை வரவேற்பதற்கு வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் சில மாற்றங்களை செய்தால் மிகவும் சிறப்பு எனக் கூறப்படுகிறது.

தீபாவளி அன்று வீடு தூய்மையாகவும், புனிதமாகவும் இருப்பதற்கு முன்கூட்டியே வீடுகளை சுத்தம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமியானவள் நேரடியாகவே நமது வீடுகளுக்கு அன்று வந்து வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆகவே வீட்டின் நிலை வாயில் முதல் உட்புற அறைகள், பூஜை அறை என இவை அனைத்தையும் சுத்தமாக தூய்மை படுத்த வேண்டும் .இதற்கு வாஸ்து சாஸ்திர குறிப்புகள் முக்கியமானவை எனக் கருதப்படுகிறது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருக ,செல்வ செழிப்பை பெற தீபாவளியன்று வீடு தூய்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

ஒரு மகிழ்ச்சி நிறைந்த வீட்டிற்கு அடிப்படையாக அமைவது அந்த வீட்டின் தூய்மை என கூறப்படுகிறது. வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தமதுவீடுகளையும் சுத்தம் செய்வர். வீடுகளில் ஒட்டடை அடித்து, மூலை முடுக்குகள் எல்லாம் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது தீபாவளிக்கான வாஸ்து குறிப்பில் முக்கியமானதாகும்.

முக்கியமாக சமையலறை ,ஸ்டோர் ரூம் மற்றும் வீட்டின் ஏனைய பகுதிகளிலும் சிறிய சிலந்தி வலைகள் இல்லாதவாறு சுத்தம் செய்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல் வீட்டில் தேவையற்ற, பயனற்ற வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டுமென வாஸ்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். வீடுகளில் பயனற்ற விதத்தில் பொருட்களை சேர்த்து வைப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல என கூறப்படுகிறது.

வீட்டில் பழைய உடைந்த  பாத்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைந்த கண்ணாடி ,  பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் இருந்து தூக்கி எறிந்து விட வலியுறுத்தப்படுகிறது. வீடுகளில் இவ்வாறு வைத்திருப்பது  கெட்ட சகுனம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வீட்டை எந்த அளவுக்கு சுத்தம் செய்து காற்றோட்டமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

வீட்டின் தலைவாசலான நிலைவாயிலை தூய்மைப்படுத்துவது வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானது. வீட்டிற்குள் மகாலட்சுமி வந்து வாசம் செய்ய வேண்டுமென்றால் முதலில் உங்கள் நுழைவாயில் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது. பொதுவாக லட்சுமி தேவியின் கால்தடங்களை பிரதான நிலைவாசலில் வரைந்து வரவேற்போம். நிலைவாசல் கதவு பகுதி தூய்மையானதாகவும் ,நன்கு வெளிச்சம்மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல ஆற்றல்கள் வீட்டினுள் நுழையும் என நம்பப்படுகிறது.

அதேபோல் வீட்டை சுத்தம் செய்யும் போது வடக்கு மற்றும் வடகிழக்கு மூலைகளில் பொருட்கள் நிறைந்திருக்காமல் இருப்பது சிறந்தது. இவ்வாறு இருந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் இருப்பதால், அது நம்பப்படுகிறது.

வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளுக்கு இடையில்  , பொருத்தமான நல்ல ஆற்றலை கொடுக்கக் கூடிய ,சிறிய அளவிலான தாவரங்களை வைத்தால் மிகவும் சிறப்பு என  வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு வீட்டின் நிதி நிலையை அதிகரிக்க அதன் மையப் பகுதியை சுத்தமாகவும், அழகுடனும் வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

வீட்டை முழுவதுமாக சுத்தப்படுத்திய பின்னர் இறுதியாக உப்பு நீரை தெளித்து நேர்மறையாற்றலை பெருக செய்ய வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி என்று அதிகாலையிலும் கல் உப்பை நன்கு கரைத்து வீடு முழுவதும் தெளிப்பது மகாலட்சுமியை நேரடியாகவே வரவேற்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். தீபாவளி அன்று வீடு பிரகாசமாக இருப்பதயே மகாலட்சுமி தாயாரும் ஏனைய தெய்வங்களும் விரும்புவார்கள் என சொல்லப்படுகிறது.

அதிலும் வாஸ்து சாஸ்திரத்துக்கு ஏற்ற வகையில் அலங்கார விளக்குகளை வீட்டின் எந்தெந்த பகுதிகளில் ஏற்றினால் சிறந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிழக்கு திசையில் மஞ்சள்,ஆரஞ்சு சிவப்பு போன்ற மங்களகரமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கலாம் .

மேற்கு திசையில் இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு விளக்குகளை கொண்டு  அலங்கரிப்பது சிறப்பு என வாஸ்து குறிப்பு கூறப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில் ஊதா,சிவப்பு, வெள்ளை நிற விளக்குகளை கொண்டு அலங்காரம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது. 

அதேபோல்  வீட்டின் வடக்கு திசையை அலங்கரிக்க பச்சை, நீலம், மஞ்சள்  நிற விளக்குகளை பயன்படுத்துவது நேர்மறை ஆற்றலை பெருக்கும் என நம்பப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget