மேலும் அறிய

Makara Jyothi : விண்ணை முட்டிய ’சாமியே சரணம்’.. பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி.. பரவசத்தில் பக்தர்கள்..

சரண கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி கண்டு பரவசமடைந்தனர் பக்தர்கள்    

சரண கோஷம் விண்ணைப்பிளக்க சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சியை பக்தர்கள் தரிசித்தனர் 

பொன்னம்பல மேட்டுல் ஜோதியாக காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 30ல் திறக்கப்பட்டது. 

மகர ஜோதி: 

பத்தனம்திட்டா (கேரளா) மலை உச்சியில் உள்ள சபரிமலை கோவிலில் இன்று மகர ஜோதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற பக்தர்களின் கோஷத்தால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. ஜோதி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணி முதல் 8 மணிவரை மகர ஜோதி தரிசனம் செய்யப்படவுள்ளது.ஜோதி தரிசனம் காண தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்ப மாலை அணிந்து வந்து தரிசனம் செய்தனர்.

மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், அதை தரிசிக்க, சபரிமலை கோயில் நிர்வாகம்  சார்பில் 10 காட்சி முனைகளை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புலிமேடு, பருந்தும்பாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளிலும் தரிசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளில் 8 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 மகர ஜோதி தெற்கு மக்களிடையே பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. மகரஜோதியை தரிசிப்பது நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவருவதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.

3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி: 

மகர விளக்கு பூஜை தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த திருவாபரணங்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் நேற்று 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக இன்று மதியம் பம்பை வந்தடைந்தது.

அதன்பின்னர் அங்கிருந்து பக்தர்கள் சூழ நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.  திருவாபரணப் பெட்டிக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  இந்த தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம்.

ஜோதி வடிவில் சாமி  காட்சியளிப்பதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வுக்காக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வர். அதேபோல், இந்தாண்டும் சபரிமலையில் ’சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்தில் மூழ்கியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget