"உடம்பை சிலிர்க்க வைத்த மகா சண்டியாகம்!" – ஜப்பானியர்கள் ஆனந்தக் கண்ணீர்!
மகாசண்டியாகத்தில் பங்கேற்றது உடம்பை சிலிர்க்க வைப்பதாக ஜப்பான் நாட்டினர் சிலிர்ப்பு உடன் தெரிவித்தனர்.

உலக நன்மை வேண்டி காட்டுமன்னார்கோவிலில் மகாசண்டியாகத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இந்த யாகத்தில் பங்கேற்றது உடம்பை சிலிர்க்க வைக்கிறது என்றும் இது பவர்ஃபுல் மிகவும் சந்தோஷம் எனவும் பெண் ஜப்பான் நாட்டவர் தமிழில் பேசினார். யாகத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிராடி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் அமைதியுடன் வாழவும், மகாசண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடத்தி வைத்த இந்த சண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டவர்கள் தமிழ் முறைப்படி பெண்கள் புடவை அணிந்தும் ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் யாகத்தில் பங்கேற்று மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் ஜப்பானை சேர்ந்த பெண் கூறுகையில், சுவாமி மந்திரம் கூறி தமிழில் வணக்கம் தெரிவித்தார். இந்த யாகத்தில் கலந்து கொண்டது மிகவும் பவர்ஃபுல்லாக இருந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேசினார். ஜப்பானைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் 15 நாள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சண்டி யாகத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து நவகிரக கோவிலுக்கு செல்ல உள்ளதாக ஆர்கனைசர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















