மேலும் அறிய

Maha Shivaratri 2024: நன்மைகள் தரும் மகாசிவராத்திரி! எப்படி வழிபட வேண்டும்?

மகா சிவராத்திரி தினத்தில் முழு மனதுடன் உருகி சிவ பெருமானை நினைத்து பூஜித்தால் மனக்கவலைகள் நீங்கி ஏராளமான நன்மைகளை அடையலாம்.

அனைத்திற்கும் ஆதியான சிவ பெருமானுக்கு மிக மிக உகந்த நாளில் ஒன்று மகாசிவராத்திரி. வருடத்திற்கு ஒரு முறை வரும் மகாசிவராத்திரியன்று சிவ பெருமானை பூஜித்து வழிபட்டால் ஏராளமான நன்மைகளும், பலன்களும் நமக்கு உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும்.

மகாசிவராத்திரி:

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை பூஜித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

மகாசிவராத்திரியன்று சிவ பெருமானக்கு கோயில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் கால பூஜையில் பிரம்மா சிவபெருமானை வழிபடும் காலம் எனவும், இரண்டாம் கால பூஜையில் பார்வதி தேவி சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும், மூன்றாவது கால பூஜையில் தேவர்கள் சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும், நான்காம் காலத்தில் மனிதர்கள் உள்பட பிற உயிரினங்கள் சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும் புராணங்கள் சொல்கிறது.

எப்படி வழிபட வேண்டும்?

இதன் காரணமாகவே, மகா சிவராத்திரியன்று நான்கு காலமும் நான்கு கால பூஜைகள் செய்யப்பட உள்ளது.  சிவராத்திரி தினத்தில் காலையிலே எழுந்து நீராட வேண்டும். பின்பு, வீட்டை முழுவதும் சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகள், வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ வழிபாடு செய்து அபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்து சிவ மந்திரங்களை உச்சரித்து சிவனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். மகாசிவராத்திரி அன்று சிவாலயங்கள் களைகட்டி காணப்படும்.

சிவாய நாமம்:

சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ அர்ச்சனை செய்வதும் மிகச்சிறப்பானதாகும். ஓம் நமசிவாய எனும் சிவாய மந்திரத்தை மனதார உச்சரித்து பூஜிக்க வேண்டும். அதேபோல, ருத்ராபிஷேகம் செய்வதும், கோயில்களில் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பானதாகும்.

விரதம் இருந்து மகாசிவராத்திரி தினத்தில் சிவ பெருமானை மனதுருகி வேண்டினால், வேண்டியது நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். சிவராத்திரி தினத்தில் விரதம் இருக்க முடியாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலக்குறைவு உண்டானவர்கள் கோயிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டாலே போதும்.  மகாசிவராத்திரி தினத்தில் வழிபடுவதால் முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.

மேலும் படிக்க: Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்

மேலும் படிக்க: பக்தர்களே! சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி சாமி கும்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்Salem Gold Thattu Vadai Set : வாவ் என்ன ருசி என்ன ருசிதங்கத்தில் தட்டுவடை? சேலத்தில் குவியும் மக்கள்Savukku Shankar cases : ”கஞ்சா வழக்கு பொய்! ஆவணங்கள் எங்கட்ட இருக்கு” சவுக்கு வழக்கறிஞர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
EXCLUSIVE: “வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
“வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
TN 10th Result 2024: 497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
Embed widget