![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madurai Temple: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மீனாட்சியம்மன் எழுந்தருளிய தேரினை பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்.
![Madurai Temple: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் Madurai Meenakshiyamman Temple Ashtami Chappara Festival devotees sing Bhakti Kosham on the way to Sami Darshan - TNN Madurai Temple: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/cb5f8db2dd490371def1c959704bc8041704351255698184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திகோஷம் முழங்க சாமி தரிசனம்.
இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும்.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும்.,
- 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு...குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்
![Madurai Temple: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/5cb5c00e49ab07ef231ca455d0d85c9c1704350785449184_original.jpeg)
![Madurai Temple: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/882d5eaa1fdbe78302d1f7cfbc8f07161704351028402184_original.jpeg)
மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும் இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)