மேலும் அறிய

Karuppasamy statue: மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி  சிலை கண்டெடுப்பு

நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுரை சிறுதூர், கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே பழங்கால கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த இந்த சிலை கண்ணனேந்தல் கிராமத்தை சேர்ந்த பொன் பாலகிருஷ்ணன், சி.எஸ்.ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் என்பவர்கள் கண்ணில் பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்து மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Karuppasamy statue: மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி  சிலை கண்டெடுப்பு
 
இந்த சிலை குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர்  து.முனீஸ்வரன் அவர்களிடம் கேட்டோம்...," தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்ற  வழிபாட்டு முறையில் முக்கியமானவை கருப்பசாமி வழிபாடு. குறிப்பாக  சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டார் வழக்கு களில்  குறிப்பிடுவதுண்டு. கிராம காவல் தெய்வமாக வழிபாடுகளில்.  இவரைக் கருப்பசாமி என்றும், கருப்பன் என்றும், கருப்பணசாமி என்றும் வேறு சில பெயர்களிலும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக அவர் உள்ளார்.  விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பசாமி  வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பன் என்று  கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம் உண்டு.
 

Karuppasamy statue: மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி  சிலை கண்டெடுப்பு
 
நம்பிக்கை 
 
கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்கு குதிகாலின் பின்புறம் கரியை குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருட்களும் உண்டு. கருப்பனசாமி என்னும் பெயர் கருப்பசாமி எனவும் வழங்கப்படுகின்றது.


Karuppasamy statue: மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி  சிலை கண்டெடுப்பு
 
சிலை உருவம்
 
சுமார் 2 அடி கொண்ட கண்டறியப்பட்ட இந்த சிலை நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் வடிவ அமைப்பை பொறுத்து நாயக்கர் காலம் சேர்ந்தவையா இருக்கலாம். இந்த சிலை குறித்து முழுமையான ஆய்வு செய்த பின்னர் முழு தகவல்கள் பெற முடியும் என்றார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget