கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் மினி பேருந்து நிலைய கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம்.

கரூர் மினி பேருந்து நிலைய கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு இன்று பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் செய்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

