மேலும் அறிய

ஆன்மீகம்: குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.

குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

 


ஆன்மீகம்: குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 

கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் குடமுழுக்கு விழா நடத்துவது என்று முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த மே 24ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்சாபந்தனம், நாடி சந்தனம் திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 2 கால யாக வெளியே பூஜைகளை செய்தனர்

 


ஆன்மீகம்: குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 

காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

 


ஆன்மீகம்: குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 

பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் மேட்டுப்பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தோகைமலை அருகே கழுகு ஊரில் மகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

தோகைமலை அருகே, கழுகு ஊரில் மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே, கழுகு ஊரில் ஊராட்சி யில் செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் செய்ய ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து செல்ல விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு மகாவிசேஷ கும்பாபிஷேகம் செய்ய காவிரியிலிருந்து தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கையுடன் பால்குடம், தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டு மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், அர்ச்சனைகள் உட்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, காப்பு கட்டுதல், மங்கள இசை, கோ பூஜை ,யாத்ரா தானம்,  புறப்பாடுகள் நடைபெற்றது. பின்னர் செல்வ விநாயகர் மகா மாரியம்மன் கோயிலுக்கு  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மூலவர் கும்பாபிஷேகம் மகாபிஷேகம் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து இளைஞர் அமைப்பினர் கோயில் வளாகம் மற்றும் பொது இடங்களில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஊரும் முக்கியஸ்தர்கள் இளைஞர் அமைப்பினர் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு செல்வ விநாயகர் மகா மாரியம்மன் தரிசனம் செய்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.