மேலும் அறிய

Kandha Shashti: கந்த சஷ்டி விரதம் இருக்கீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் இதுதான்!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் பக்தியுடன் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறையில் தொடங்கி வரும் சஷ்டி, மகா சஷ்டி என்றும் கந்த சஷ்டி திருவிழா என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டிற்கான சஷ்டி திருவிழா நேற்று முன்தினனம் தொடங்கியது. இதன் காரணமாக அறுபடை வீடு உள்பட உலகெங்கும் உள்ள முருகனின் கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

செய்ய வேண்டியது:

  • சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாளான முருகன் திருக்கல்யாணம் வரை சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • விரதத்தை முடிக்கும் வரை தினமும் காலை மாலை இரு வேளை நீராடி, முருகப்பெருமானுக்கு பூஜை செய்ய வேண்டும்.
  • சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் வரை அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வருவது சிறப்பு ஆகும்.
  • விரதம் இருக்கும் நாட்களில் கந்தபுராணம் உள்ளிட்ட முருக புராணங்களை கேட்பது சிறப்பு ஆகும்.
  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினசரி கந்தசஷ்டி இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
  • சஷ்டி விரதம் இருப்பவர்கள் மது, புகை உள்ளிட்ட பழங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம் ஆகும்.
  • தேவையற்ற வீண் எண்ணங்களை தவிர்த்து முருக சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
  • விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹார தினத்தில் விரதம் இருப்பது சிறப்பாகும்.

கண்டிப்பாக செய்யக்கூடாதது:

  • முருகனை மனதார நினைத்து சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
  • யாரையும் கோபத்தில் திட்டவும், யாரிடமும் கோபமாக கத்தவோ கூடாது.
  • விரதம் இருக்கும் நாட்களில் முடிந்தவரை காலணியை தவிர்ப்பது நல்லது ஆகும்.
  • விரதம் இருக்கும் நாட்களில் சோம்பேறித்தனமாகவோ, பகலில் தூங்கவோ தாமதமாக எழுவதோ கூடாது.

சஷ்டி விரதத்தை தொடங்கியவர்கள் வரும் சூரசம்ஹாரம் நாள் வரை விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்காக முருகன் கோயில்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Embed widget