![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kanchipuram Temple : ஓம் சக்தி பராசக்தி.. தங்கத்தேரை பக்தி பரவசத்துடன் இழுத்த பக்த கோடிகள்..
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு தங்கத்தேர் ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது
![Kanchipuram Temple : ஓம் சக்தி பராசக்தி.. தங்கத்தேரை பக்தி பரவசத்துடன் இழுத்த பக்த கோடிகள்.. Kanchipuram Kamatchi Amman Temple held a grand procession on the eve of Aippasi on Friday Kanchipuram Temple : ஓம் சக்தி பராசக்தி.. தங்கத்தேரை பக்தி பரவசத்துடன் இழுத்த பக்த கோடிகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/4201737f054bfb209700b16d3ddd34871699060685006113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐப்பசிமாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம். மஞ்சள் நிற பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் மாலை அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் தங்கத்தேரில் எழுந்தருளிய காஞ்சி காமாட்சி அம்மன்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
![Kanchipuram Temple : ஓம் சக்தி பராசக்தி.. தங்கத்தேரை பக்தி பரவசத்துடன் இழுத்த பக்த கோடிகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/a8a3dcfba1a47a56164e0e8b6a59e5441699060768830113_original.jpg)
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகைய பெருமைகளை தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள் என்பது நம்பிக்கை.
பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர்களும் முனிவர்களும் கீழே ஒரு வடிவத்தில் இருந்த பராசக்தியே சந்தித்த முறையிட்டனர்.
இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள் என நம்பப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)