மேலும் அறிய

'காண கண்கோடி வேண்டும்' ..... அன்னம், காய்கறி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

அன்னாபிஷேகம் 2024 : விழுப்புரத்தில் 75 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டும், 200 கிலோ அன்னத்தையும்  பயன்படுத்தி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

ஐப்பசி  அன்னாபிஷேகம் 

ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்கள்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். லிங்கத் திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். "தான் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். அதனால் பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையை கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையை கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிட்டதாக" நம்பப்படுகிறது.

ஆதிவாலீஸ்வரர் சிவன்

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ( Villupuram) ஆதிவாலீஸ்வரர் சிவன்கோயிலில் மூலவர்க்கு 50 கிலோ அன்னத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனைகாண்பிக்கப்பட்டது. ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பானது. இறைவன் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம். பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்கள் சேர்ந்ததால் ஆகிறது. பஞ்சபூதங்களால் ஆன இந்த அன்னம் மனிதனுக்கு இன்றியமையாத உணவாக விளங்குகிறது. சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம் ஆகும். 


காண கண்கோடி வேண்டும்' ..... அன்னம், காய்கறி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் திருக்கோவிலில், மொத்தமாக 75 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டும், 200 கிலோ அன்னத்தையும்  பயன்படுத்தி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக மூலவருக்கு 50 கிலோ அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சிறப்பு தீபாரதனை  காண்பிக்கப்பட்டது.

மயிலம்  : ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவில்

மயிலம் அடுத்த பெரும்பாக்கத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரும்பாக்கம் கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர்கள் ஸ்ரீ மங்களாம்பிகை மற்றும் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் தேன் பன்னீர் மற்றும் பல்வேறு வகையான அபிஷேகப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மங்களாம்பிகை மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


காண கண்கோடி வேண்டும்' ..... அன்னம், காய்கறி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் நகர் காட்சியளித்த ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாரத்தை கற்பூரத்தை காண்பிக்கப்பட்டது. மேலும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் அன்னத்தால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஸ்ரீ மகாலிங்கேஸ்வரருக்கு பஞ்சமுகத்திபராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை அன்பநாயக ஈஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழா

திண்டிவனம் கிடங்கல் கோட்டை அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை அன்பநாயக ஈஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர்கள் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி மற்றும் ஸ்ரீ அன்பநாயக ஈஸ்வரர் பால், தயிர், சந்தனம் ,தேன் ,பன்னீர் மற்றும் பல்வேறு வகையான அபிஷேகப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாரத்தை கற்பூரத்தை காண்பிக்கப்பட்டது. மேலும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ  அன்பநாயக ஈஸ்வரர்  பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் அன்னத்தால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஸ்ரீ  அன்பநாயக ஈஸ்வரர்க்கு பஞ்சமுகத்திபராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


காண கண்கோடி வேண்டும்' ..... அன்னம், காய்கறி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

குழந்தை பாக்கியம்

மேலும், பக்தர்கள் இந்த அன்னாபிஷேகத்தை கண்டால் மிகவும் சிறப்பானது எனவும்  இந்த அன்னத்தை வாங்கி உன்னால் நோய்நொடி நீங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்ற ஐதீகம் இருப்பதால் , இந்த அன்னாபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னாபிஷேகம் : அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்ததாக நம்பிக்கை

அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோயில்களிலும் செய்வது வழக்கமான ஒன்று. முதலில் எப்போதும் செய்யும் வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளை உரலிலிட்டு குத்தி அரிசியாக்கி வரும் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் மூடி பலவகையான காய்கறிகளால் அலங்கரித்து, பூஜித்து பின்னர் அனைவருக்கும் அந்த அன்னத்தை பிரசாதமாக வழங்குவார்கள்

மேலும் மிகுதி அன்னத்தை நீர் நிலைகளில் சேர்ப்பித்து மீன் போன்ற ஜீவராசிகளுக்கும் அளித்து விடுவார்கள். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அந்த பிரசாதத்தை பெரும் தம்பதியர் இணைபிரியாமல் வாழ்வாங்கு வாழ்வார்கள் என தெய்வத்தின் குரலில் மஹாசுவாமிகள் கூறுகிறார். அதனால் அன்று மாலை ஒவ்வொரு சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்துள்ளதால் இதனை தரிசிக்கும் பக்தர்கள் கோடிலிங்க தரிசன பலனை அடைகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
திமுக அதிரடி: தஞ்சாவூர் எம்.பி பதவி பறிப்பு! சாக்கோட்டை அன்பழகனுக்கு அதிர்ஷ்டம்? பரபர பின்னணி
TVK Fails?: கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
கூட்டமும் வரல, விஜய்யும் சரியா பேசல; எங்கயோ இடிக்குதே.? தவெகவின் உண்மையான மவுசு இவ்ளோதானா.?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி?
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
ரயில்வே சீர்கேட்டின் உச்சம்: திருவள்ளூர் ரயில் விபத்து - ராமதாஸ் கண்டனம்
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
'இன்னும் கஷ்டப்பட்டே இருக்கியே ப்பா...சரத்குமார் பிறந்தநாளுக்கு எமோஷனலாக வாழ்த்திய வரலட்சுமி
Chennai Power Shutdown(15.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? முழு விவரம் இதோ
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
7 Seater SUV: 7 சீட்டு.. மஹிந்திரா முதல் நிசான் வரை.. பெரிய குடும்பங்களுக்காக விற்பனைக்கு வரப்போகும் கார்கள் - எப்போது?
7 Seater SUV: 7 சீட்டு.. மஹிந்திரா முதல் நிசான் வரை.. பெரிய குடும்பங்களுக்காக விற்பனைக்கு வரப்போகும் கார்கள் - எப்போது?
Embed widget