மேலும் அறிய

தமிழ்நாட்டிலே ஒரே சிவாலயம்! துளசி இலையால் அர்ச்சனை! துளசீஸ்வரர் கோயிலுக்கு எப்படி செல்வது?

தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும் ஒரே சிவன் கோயிலான துளசீஸ்வரர் கோயிலுக்கு ஆவணி மாதத்தில் சென்று வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்றான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. நரியை பரியாக்கியது. கருங்குருவிக்கு உபதேசம் என ஆவணி மாதத்தில் சிவ பெருமானின் திருவிளையாடல்கள் பல அரங்கேறிதாக புராணங்கள் கூறுகிறது. பொதுவாக ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படும் சூழலில், சனிப் பிரதோஷத்தில் ஆவணி மாதம் பிறந்திருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டிலே ஒரே சிவாலயம்:

இந்த ஆவணி மாதத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். குறிப்பாக, தனித்துவம் வாய்ந்த சிவாலயங்களுக்கு செல்வது கூடுதல் சிறப்பு என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் தனிச்சிறப்புகள் வாய்ந்தது ஆகும்.

பொதுவாக சிவாலயங்களில் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இந்த கோயிலில் மட்டும்தான் துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. மகா முனிவர் அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 சிவலிங்கத்தில் இதுவும் ஒன்று என இக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டிலே துளசியால் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே கோயில் இந்த சிவாலயம் மட்டுமே ஆகும். இந்த கோயிலில் உள்ள லிங்கம் 5 அடி உயரம் கொண்டது ஆகும்.

துளசி கொண்டு பூஜை ஏன்?

சிவபெருமான் – பார்வதி தேவி திருமணத்திற்காக தேவர்கள், அசுரர்கள் என குவிய, பூமியின் சமநிலையை சரி செய்ய அகத்தியரை மறு திசைக்கு சிவபெருமான் அனுப்பினார். அப்போது, 108 லிங்கங்களுக்கு அகத்தியர் பூஜை செய்தார்.

அப்போது, ஒரு தடாகத்தை அமைத்து கொன்றை மலர் மற்றும் துளசி கொண்டு சிவபெருமானை அகத்தியர் பூஜித்தார். அவரது வழிபாட்டால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் துளசீஸ்வரராக அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் காட்சி தந்ததாகவும், அதன் காரணமாக இந்த கோயிலில் துளசி கொண்டு அர்ச்சனை செய்யப்படுவதாகவும் கோயில் வரலாறு கூறுகிறது.

கோயில் எங்கு உள்ளது?

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், சென்னைவாசிகளுக்கும் இந்த கோயில் அருகில் உள்ளது. சிங்கபெருமாள் கோயில் – வல்லக்கோட்டை செல்லும் பாதையில் அமைந்துள்ளது கொளத்தூர் என்ற கிராமம்.

செம்பியன் கொளத்தூர் என்று பெயரிடப்பட்ட கிராமமே நாளடைவில் மாறி தற்போது கொளத்தூர் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான நாட்களிலே கூட்டம் நிரம்பி வழியும் இந்த கோயிலில் மற்ற நாடகளை விட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானுக்கு உகந்த இந்த ஆவணி மாதத்தில் தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யும் ஒரே சிவாலயமான இந்த துளசீஸ்வரர் கோயிலுக்கு சென்றால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Baba Vanga Predictions 2026: “ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
“ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
Tamilan : ‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
Old pension scheme : மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
Embed widget