மேலும் அறிய

Vaikunta Ekadashi 2023: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வைபவம்.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்

நம்மாழ்வார் எதிர் சேவையாற்ற ஆலயத்தின் வடக்கு வாசலான சொர்க்கவாசல் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பக்தி முழக்கங்களுக்கிடையே திறக்கப்பட்டது.

சேலம் கோட்டை அழகிரிநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசல் சிறப்பு வைபவம் விமரிசையாக நடைபெற்றது. சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவையொட்டி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் பங்கேற்றார். முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிரிநாதர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து ஆலய குருக்கள் சுதர்சனம் பட்டாச்சாரியார் தலைமையில் ஏகாதசி ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நம்மாழ்வார் எதிர் சேவையாற்ற ஆலயத்தின் வடக்கு வாசலான சொர்க்கவாசல் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பக்தி முழக்கங்களுக்கிடையே திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளை தரிசித்து சொர்க்கவாசல் வழியே செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதலே காத்திருந்தனர்.

Vaikunta Ekadashi 2023: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வைபவம்.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்

அதிகாலை ஐந்து மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வளம் வந்தார். பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள வருடம் ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார். இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயாருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இது குறித்து பட்டாசாரியார் சுதர்சனம் கூறுகையில், விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுண்ட ஏகாதசி இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம். எனவே இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார். 

Vaikunta Ekadashi 2023: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வைபவம்.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்

இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஆன்லைனில் மூலமாக பதிவு செய்தவர்கள் தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கோட்டை அழகிரிநாதர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முன் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இலவச தரிசனம் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். திருக்கோவில் முழுவதும் காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாநகர் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று சேலம் மாநகரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில், பட்டை கோவில், லட்சுமி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வணங்கி சொர்க்கவாசல் வழியாக சென்றனர்.

சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget