மேலும் அறிய

ஹிஜாப்பை ஒழுங்காக அணியாத இளம்பெண் அடித்துக் கொலை? போலீசார் மீது மக்கள் குற்றச்சாட்டு!

ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் போலிஸாரால் கைது செய்யப்பட்டு, கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார்.

ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் போலிஸாரால் கைது செய்யப்பட்டு, கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார். இதுகுறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

அவரது சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

22 வயதான மஹ்சா அமினி, தனது குடும்பத்தினருடன் ஈரானிய தலைநகருக்கு சென்ற போது, ​​இஸ்லாமிய பெண்களுக்கான கடுமையான ஆடைக் விதிகளை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட போலிஸ் பிரிவினரால் செவ்வாயன்று தடுத்து வைக்கப்பட்டார். அங்கு, பொது இடங்களில் கட்டாயமாக முக்காடு அணிவது விதியாக உள்ளது.

இதற்கிடையில், துரதிர்ஷ்டவசமாக, அவர் இறந்துவிட்டதாகவும் அவருடைய உடல் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, அமினி ஆரோக்கியமாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு கோமா நிலைக்கு சென்றதாகவும் பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தப்போது இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்கு இடையில் என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஈரானில் விதிமீறல்களை கண்காணிக்கும் 1500tavsir செய்தி தொலைக்காட்சி, அவர் தலையில் அடிபட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான படங்களில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டம் கூடுவதையும், குவிந்திருந்தவர்களை கலைக்க போலீஸார் முயல்வதையும் காணலாம். அங்கு கூடியிருந்த மக்கள் கோபத்துடன் ஆட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்னர்.

"22 வயதான இளம் பெண் மஹ்சா அமினி, காவலில் வைக்கப்பட்ட பிறகு சந்தேகத்திற்கிடமான முறையில் மரணத்தது தொடர்பாக, அவருக்கு நேர்ந்த சித்திரவதை மற்றும் காவலில் உள்ள பிற மோசமான நடத்தை போன்ற குற்றச்சாட்டுகள் உள்பட, அனைத்தும் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

"தெஹ்ரானில் 'ஒழுக்கக் காவலர்' என்று அழைக்கப்படும் ஆடை கட்டுப்பாட்டை கண்காணிக்கும் காவல்துறை, அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். நாட்டின் தவறான, இழிவான மற்றும் பாரபட்சமான கட்டாய முக்காடு சட்டங்களை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். அவரை தன்னிச்சையாக கைது செய்தனர். இதற்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும்" என ஆம்னெஸ்டி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
TNEA 2025: பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Embed widget