மேலும் அறிய

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த சிரப்பால் 18 குழந்தைகள் உயிரிழப்பு.. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Doc-1 Max syrup எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காம்பியாவில் இதேபொன்ற குழந்தைகளின் இறப்பு சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம், இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை உட்கொண்டதால் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த மருந்தை Marion Biotech Private Limited என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் உஸ்பெகிஸ்தானில் 2012 இல் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நொய்டாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப் மருந்தை இறந்த குழந்தைகள் உட்கொண்டதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்றுவரை, கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் இறந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது."இறந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை 2-7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3-4 முறை, 2.5-5 மில்லி அளவில், குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவை விட அதிகமாக வீட்டில் உட்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும் மருந்தின் முக்கிய கூறு பாராசிட்டமால் என்பதால், டாக்-1 மேக்ஸ் சிரப்பை பெற்றோர்கள் சளிக்கு எதிரான மருந்தாக தங்கள் சொந்த அல்லது மருந்தக விற்பனையாளர்களின் பரிந்துரையின் பேரில் தவறாகப் பயன்படுத்தினார்கள்," என அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. 

இந்த டாக்-1 மேக்ஸ் சிரப்பில் எத்திலீன் கிளைகோல் இருப்பதாக ஆரம்ப ஆய்வக ஆய்வுகள் காட்டுகின்றன. "இந்த பொருள் நச்சுத்தன்மை வாய்ந்தது, மேலும் 95% செறிவூட்டப்பட்ட சிரப்பில் சுமார் 1-2 மில்லி அளவு நோயாளியின் ஆரோக்கியத்தில் வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்சினைகள் மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியது. 

கவனக்குறைவாக இருந்ததற்காக மொத்தம் ஏழு ஊழியர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர் மேலும் பல நிபுணர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தின் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் பரிந்துரைக்கப்பட்ட முறையில் நாட்டின் அனைத்து மருந்தகங்களிலும் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும், மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே மருந்துகளை வாங்குமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

காம்பியாவில் கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தி 66 குழந்தைகளின் இறந்த சம்பவத்தில், தொடர்புடைய இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மெய்டன் பார்மா தயாரித்த நான்கு "அசுத்தமான" இருமல் சிரப்களுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்த சில மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த சம்பவம் உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.         

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget