மேலும் அறிய

துப்பாக்கி முனையில் கடத்தல்..! கைக்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை...! அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிகழ்ந்த கொடூரம்..!

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடாக வலம் வரும் அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல மாகாணமான கலிபோர்னியாவிலும் இந்தியாவைச் சேர்ந்த பலரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கலிபோர்னியாவில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜஸ்தீப்சிங். அவருக்கு வயது 36. அவரது மனைவி ஜஸ்லின் கவுர், வயது 27. இவர்களுக்கு அரூஹி தேரி என்ற 8 மாதக் கைக்குழந்தை இருந்தது. இவர்களுடன் ஜஸ்தீப்சிங்கின் அண்ணன் அமன்தீப்சிங் ( வயது 39) வசித்து வந்தார். இந்த நிலையில், அவர்களது வீட்டு அருகே உள்ள பழத்தோட்டம் அருகே கலிபோர்னியா நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நான்கு பேரும் சடலமாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாகாண போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நான்கு பேரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இவர்களை துப்பாக்கி முனையில் ஒருவர் மிரட்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இப்போது, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஜூசஸ் மானுவேல் சலாடோ என்ற நபரை கைது செய்துள்ளனர். அவர் உயிரிழந்த ஒருவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியுள்ளார். மேலும், சலோடா தற்கொலைக்கு முயற்சி செய்ததையடுத்து, அவரை மருத்துவமனையில் தற்போது கண்காணிப்பில் உள்ளார்.

சி.சி.டி.வியில் சந்தேகத்திற்குரிய நபர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை  மிரட்டி டிரக்கில் அழைத்துச்செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த டிரக் உயிரிழந்த அமன்தீப்சிங்கிற்கு சொந்தமானது. ஜஸ்லினை கடைசியாக தான் அந்த சந்தேகத்திற்குரிய நபர் டிரக்கில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும், தீயணைப்பு துறையினர் அமன்தீப்பின் டிரக் தீப்பற்றி எரிவதையும் கண்டுபிடித்துள்ளனர்.


துப்பாக்கி முனையில் கடத்தல்..! கைக்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை...! அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிகழ்ந்த கொடூரம்..!

ஜஸ்தீப் – ஜஸ்லின் இடையே கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் அமெரிக்காவிற்கு குடியேறினர். உயிரிழந்த ஜஸ்தீப்சிங் தனது குடும்பத்தினருடன் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஜஸ்லின் குடும்பத்தினருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். தங்களது பேரக்குழந்தையை முதன்முறையாக பார்ப்பதற்காக ஆவலுடன் இருந்த ஜஸ்லினின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஜஸ்தீப்சிங் குடும்பத்தினரும் இந்த சோகம் தாங்க முடியாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் முதலமைச்சர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : Nobel Prize 2022 Literature: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிப்பு; எதற்கு தெரியுமா?

மேலும் படிக்க : Thailand Mass Shooting; தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்துக்குள் திடீர் துப்பாக்கிச் சூடு: 34 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget