![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
UK Covid Outbreak: இரண்டு புதிய உருமாறிய கொரோனா..! நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு...! உஷார் மக்களே...
தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டு உருமாறிய கொரோனாவும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை என்றும் தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது.
![UK Covid Outbreak: இரண்டு புதிய உருமாறிய கொரோனா..! நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு...! உஷார் மக்களே... UK Covid Outbreak Two new Covid variants found in UK with hundreds of cases detected know details UK Covid Outbreak: இரண்டு புதிய உருமாறிய கொரோனா..! நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு...! உஷார் மக்களே...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/28/592b8a868f7d56c478c8ab565a1db8181666971772309224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரிட்டனில் இரண்டு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் BQ.1 என்ற உருமாறிய கொரோனாவால் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். XBB என்ற உருமாறிய கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு உருமாறிய கொரோனாவும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை என்றும், தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒமைக்ரான் கொரோனாவில் இருந்து இந்த இரண்டு கொரோனாவும் உருமாறியுள்ளது என்றும் இவற்றில் இருந்து உருமாறும் கொரோனாவால் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் நவம்பர் மாதத்திற்குள் புதிய கொரோனா அலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதேபோல சமீபத்தில், ஒமைக்ரான் கொரோனாவிலிருந்து BA.5.1.7 என்ற துணை வகை உருமாறியது. இது, அதிக தீவிர தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. BF.7 கொரோனா முதல்முறையாக குஜராத் உயிரிதொழில்நுட்பம் ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சீனாவில் சமீபத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க BF.7 மற்றும் BA.5.1.7 வகையே காரணம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா வகைகள், நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டிருப்பதால் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக போடப்பட்டுள்ள தடுப்பூசி மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் உருவாகியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து மற்ற கொரோனா வகைகளை காட்டிலும் BF.7 வகை தப்பிக்கும் திறன் கொண்டது என இரண்டு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவரும் மருத்துவருமான என்.கே. அரோரா கூறுகையில், "அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் முக்கியமானவை. கொரோனா இன்னும் உள்ளது. மேலும், புதிய கொரோனா மாறுபாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகின்றன. வெளிப்படையாக, அவர்களிடமிருந்து நாம் தப்பிக்க முடியாது. எனவே, கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
கொரோனா பெருந்தொற்று கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)