மேலும் அறிய

சர்வதேச நிதியம் இலங்கைக்கு இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வழங்குகிறதா?

"ஊழியர் மட்ட ஒப்பந்தம் இலங்கைக்கான நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே" என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இந்திய மதிப்பில் 20,000 கோடிக்கு மேல் அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக  வழங்க முன் வந்திருக்கிறது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) வியாழன் அன்று இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்க அனுமதித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . 1948 இல் இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது அதற்குப்பின் ஒரு முறை கூட தற்போது இருக்கும் மிக மோசமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டது கிடையாது.உணவு பற்றாக்குறை எரிபொருள் பற்றாக்குறை உரப்பற்ற குறை மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் ஆகப்பெரிய அளவில் பற்றாக்குறையுடன் இருந்தன. இதனால் மிகப்பெரிய மக்கள் எழுச்சி காரணமாக அதிபர் மாறி புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டு இலங்கைக்கு இலங்கை பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டி ஐ எம் எஃப் இடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினார் இதனை அடுத்து இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் சம்மதம் தெரிவித்து.

IMF உடனான இலங்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த ஒப்பந்தம் நம்பிக்கை அளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை தூதர்  மிலிந்த மொரகொட   நம்பிக்கையுடன் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இருப்பினும் இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் ஆனது மிகுந்த கடுமையான பாதையில் பயணிக்க வேண்டி இருக்கிறது என்ற கருத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார்


செவ்வாயன்று, நாட்டின் நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, வருவாயை அதிகரிப்பதற்கும் மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் தயாரிக்கப்பட்ட தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கை என்பது ஆரம்ப நிலையில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்  நிறைவேற்று அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் இலங்கை அதிகாரிகள் முன்னர் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த ஒப்பந்தமானது செல்லுபடியாக செல்லும்.

"ஊழியர் மட்ட ஒப்பந்தம் இலங்கைக்கான நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே" என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி பீட்டர் ப்ரூயர் கூறியுள்ளதாக தெரிகிறது. "அதிகாரிகள் ஏற்கனவே சீர்திருத்த செயல்முறையைத் தொடங்கியுள்ளனர், அது உறுதியுடன் தொடர வேண்டும்." இன்று அவர் மேலும் தெரிவித்தார்.

வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் கடன் தர ஒப்புக்கொண்டது இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் வியாழன் மிலிந்த மொரகொடா கூறியதாவது, “சர்வதேச நாணயம் நிதியம் மறுசீரமைப்புத் திட்டத்தின் வரையறைகளை உருவாக்கியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை வணிகக் கடன், இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடன்கள் மற்றும் உள்நாட்டுக் கடன்கள் என நிறைய படங்கள் உள்ளன.எனவே இதை எவ்வாறு சமநிலைப்படுத்துவது. பிறகு சில வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சர்வதேச நாணயம் நிதியம் தனது அறிக்கையில் இலங்கைக்கு கடன் தரும் நாடுகளிடமிருந்து கூடுதலாக நிதி உதவி கிடைக்க வேண்டும்,இது இலங்கைக்கு கடனுக்கான பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும், கடன்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கும் உதவும் என கூறி இருக்கிறது.

சர்வதேச நாளைய நிதியம், இலங்கையின் பொருளாதாரம் நிலைபெறவும் மற்றும் வளர்ச்சியை அடையவும் வழங்கப்படும் இந்த நிதி நான்கு ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும். மேலும் நிதி ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிப்பதற்கும், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான புதிய விலையை அறிமுகப்படுத்துவதற்கும், சமூக செலவினங்களை அதிகரிப்பதற்கும், மத்திய வங்கியின் சுயாட்சியை உயர்த்துவதற்கும் மற்றும் குறைந்துபோன வெளிநாட்டு இருப்புக்களை மீண்டும் உருவாக்குவதற்கும்,இந்த நிதியானது உதவும்.மேலும் இது அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டி தரும் என்றும்,இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இலங்கையின்  மிக குறைந்த வருமானம் உடைய மக்களின் தொடங்கி, இந்தத் திட்டம் முக்கிய வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும். இந்தச் சீர்திருத்தங்களில் தனிநபர் வருமான வரியை மேலும் முற்போக்கானதாக மாற்றுவதும், பெருநிறுவன வருமான வரி மற்றும் VATக்கான வரி அமைப்பை விரிவுபடுத்துவதும். சர்வதேச நாணயம் நிதியம்   இலங்கைக்கு வழங்க உள்ள இந்த நிதியானது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கிடைத்த மரக்கட்டை போன்றதாகும் இதைப் பற்றி அவர் எப்படி தப்பிப்பாரோ அதைப் போன்று இலங்கை ஆனது இந்த நிதியை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு இலங்கை மக்களின் பிரார்த்தனையாக இருக்கும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget