மேலும் அறிய

Texas: டெக்சாஸ் மாகாணத்தில் கன்டெய்னரில் சடலமாக மீட்கப்பட்ட 46 அகதிகளின் உடல்!

கன்டெய்னரில் இருந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டனியோ (San Antonio, Texas) பகுதியில் ஒரு கன்டெய்னரில் இருந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லை பிரச்சினை பல காலங்களாக தொடர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் கண்டெடுக்கப்பட்ட 46 பேரும் கண்டெய்னரில் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாகவும், உயிருக்குப் போராடிய 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெக்சாஸ் நகரின் காவல்துறை தெரிவித்துள்ளது.

சான் அன்டோனியாவில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நேற்று மாலை கன்டெய்னரில் அகதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சான் ஆண்டனியோ நகர தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்டெய்னரில் தண்ணீரே இல்லை; அதற்கு ஏ.சி. இருந்தும். அது செயல்படவில்லை. உள்ளே இருந்தவர்களின் உடலில் கடுமையான வெப்பத்தை உணர முடிந்தது. இதனால், வெப்பம் மற்றும் காற்று இல்லாதது ஆகியவைகளால் குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்துவிட்டனர்.”என்று தெரிவித்தார்.

 

ரயில் தண்டவாளம் உள்ள பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் இருந்த ஒருவர், உதவிக்காக அழுக்குரல் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்வையிட்டுள்ளார். நிலைமை அறிந்த அவர்  நகர போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

சான் அன்டோனியோ பகுதியில் வெப்பநிலை அதிக ஈரப்பதத்துடன் 39.4 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் அமெரிக்க அதிபரின் குடியுரிமை கொள்கைகள் மீதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget