மேலும் அறிய

'11 நிமிடங்களில் முடிந்த பாலியல் வன்கொடுமை' - குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்த நீதிபதி!

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்கில், ‘வன்கொடுமை 11 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்தது’ என்று கூறி, குற்றவாளியின் தண்டனையை நீதிமன்றம் குறைத்திருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில், ‘வன்கொடுமை 11 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்தது’ என்று கூறி, குற்றவாளியின் தண்டனையை நீதிமன்றம் குறைத்திருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாசெல் என்ற மாநிலத்தில் 33 வயது பெண் ஒருவர், இரு ஆண்களால் தனது வீட்டின் முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை, சுவிட்சர்லாந்து நாட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை அணுகிய விதமும், குற்றவாளிகள் மீதான கரிசனமும் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன. 

குற்றவாளிகளுள் ஒருவர் சிறார் என்பதால், அவரை சிறார் சிறைக்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளது பாசெல் மாநில நீதிமன்றம். மற்றொரு குற்றவாளியான 32 வயது ஆணுக்கு அவரது தண்டனைக் காலம் 51 மாதங்கள் என்பதில் இருந்து 36 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு மூலம் இதனைப் பெற்றுள்ள அவர், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் விடுதலை செய்யப்படுவார்.

பாசெல் பெண்கள் போராட்டம்
பாசெல் பெண்கள் போராட்டம்

 

இந்தக் குற்றவாளியின் தண்டனையைக் குறைத்த போது, பாசெல் நீதிமன்றத்தின் நீதிபதி லிசோலெட் ஹென்ஸ் ஸ்விஸ் குற்றவியல் சட்டத்தின்படி குற்றவாளியின் மிதமான அளவிலேயே குற்றம் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் அவர், வன்கொடுமைச் சம்பவம் வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், அது மிகக் குறைவான நேரம் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிரந்தர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ஸ்விஸ் ஊடகங்கள், இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டும் விதமாக அமைந்திருப்பதாக விமர்சித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் தன்னை வன்கொடுமை செய்தவர்களைத் தூண்டியதாகவும், அவர்கள் சந்தித்துக் கொண்ட க்ளப்பில் அவர்களைக் கவர்வது போல நடந்துகொண்டதாகவும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நெருப்புடன் விளையாடியதால், அவருக்கு இப்படியான விபரீதம் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளது இந்தத்  தீர்ப்பு. 

குற்றவாளிகள் இருவரும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், தண்டனைக் கால முடிவடைந்ததும் அங்கு நாடுகடத்தப்படுவர் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  

பாசெல் பெண்கள் போராட்டம்
பாசெல் பெண்கள் போராட்டம்

 

இந்த வழக்கு குறித்த தீர்ப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 அன்று, சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ‘வன்கொடுமை என்பதில் குறைவான நேரம், அதிகமான நேரம் என்பது கிடையாது’ என்று போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டுள்ளனர். 

பாசெல் நீதிமன்றத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பு நகல் வெளியிடப்பட்ட பிறகு, சுவிட்சர்லாந்து கூட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு செய்யப்போவதாக அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget