மேலும் அறிய

London Protest: லண்டனில் எதிரொலித்த மணிப்பூர் விவகாரம்..பழங்குடி பெண்களுக்காக போராட்டத்தில் குதித்த மனித உரிமைகள் அமைப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்கள் குழு, மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய லண்டனில் அமைதி ஊர்வலத்தை  ஏற்பாடு செய்தனர்.

கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்களையும் கொடூர கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்திய மணிப்பூர் சம்பவம்:

இந்த சம்பவம், நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்கள் குழு, மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய லண்டனில் அமைதி ஊர்வலத்தை  ஏற்பாடு செய்தனர். வடகிழக்கு இந்திய பெண்களின் ஆதரவு குழு (WNESN) இந்திய தூதரகத்திற்கு வெளியே ஏற்பாடு செய்த ஊர்வலத்தில் அமைதியைக் குறிக்கும் வகையில் முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் பதாகைகளை ஏந்தி கலந்து ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம், நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்தக் குழுவினர் நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்றனர். 

லண்டனில் அமைதி போராட்டம்:

இதுகுறித்து WNESN அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மணிப்பூரின் குக்கி-ஸோ சகோதரிகள்  வலியையும் வேதனையையும் பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் ஒற்றுமையாக ஊர்வலம் சென்றோம்" என குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா காலத்தில் பெண்கள் உதவி செய்யும் வகையில் இந்த குழு தொடங்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தால், கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கி போயுள்ளது.

நாடாளுமன்றத்தில் 7ஆவது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் பழங்குடி பெண்கள் தொடர்பான விசாரணை, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இது தொடர்பான விசாரணை, மணிப்பூர் வெளியே நடத்தப்படும் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget