மேலும் அறிய

ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு.. இருநாட்டு உறவு.. ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி..!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இன்று சந்திக்கிறார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். 

இந்திய பிரதமர் மோடி முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பானில் 12 முதல் 16 மணி நேரம் தங்கியிருக்கும் மோடி, மறைந்த அபேயின் மனைவி அகீ அபேவை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்துள்ளார் மோடி. இருநாட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஜூலை மாதம் பிரச்சார உரையின்போது அபே சுட்டுக் கொல்லப்பட்டார். அபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 9 ம் தேதி ஒரு நாள் தேசிய துக்கத்தை இந்தியா அறிவித்தது.

இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நான் இன்று இரவு டோக்கியோ செல்கிறேன். அனைத்து இந்தியர்கள் சார்பாக பிரதமர் கிஷிடா மற்றும் திருமதி அபே ஆகியோருக்கு நான் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அபே சான் எண்ணியபடி, இந்தியா - ஜப்பான் உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என பதிவிட்டிருந்தார். 

முன்னதாக வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா செய்தியாளர் சந்திப்பில்,புடோகானில் நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் மோடி கலந்து கொள்வார் என்றும், அதைத் தொடர்ந்து அகசாகா அரண்மனையில் நடைபெறும் வாழ்த்து நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும், பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அபேயின் மனைவி அகி ஆகியோரை சந்திப்பார் என்றும் தெரிவித்தார்.

"இந்தியா-ஜப்பான் உறவுகளின் சிறந்த சாம்பியனாகவும், அன்பான நண்பராகவும் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் அபேயின் நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்று கூறினார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அப்போதிலிருந்து ஷின்சோ அபேவின் நட்பு பத்தாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்தது. இரு தலைவர்களும் 2014 இல் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் குறித்து சிறப்பு ஆலோசனை மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து பேசி இரு நாட்டுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தினர்.

அதேபோல், கடந்த ஜூலை 8 அன்று நாரா நகரில் பிரச்சார உரையின் போது அபே படுகொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கான இரண்டாவது அரசு நிகழ்வாக அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இந்த இறுதி சடங்கில் கிட்டதட்ட 20,000 ஆயிரத்திற்கு அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget