மேலும் அறிய

Pink Moon 2025: என்னது பிங் மூனா! அப்படினா என்ன?, எப்போது?, இந்தியாவில் தெரியுமா?

Pink Moon 2025: இந்த ஆண்டின் வானியல் நிகழ்வின் சிறப்பான நிகழ்வாக கருதப்படும் பிங் மூன் குறித்தும், இந்தியாவில் எப்போது தெரியும் என்பது குறித்தும் பார்ப்போம்.

Pink Moon 2025: நாளைய தினம் பிங் மூன் என்ற நிகழ்வு நிகழ உள்ளதாக வானியல் செய்திகள் தெரிவிக்கின்றன. பிங் மூன் என்றால், நிலவு உண்மையில் இளஞ்சிவப்பு நிறமாக தெரியும் என்று எடுத்துக் கொள்ள கூடாது. பிங்க் மூன் என்ற சொல்லானது, பாரம்பரியமாக அமெரிக்காவில் பயன்படுத்தபட்ட சொல்லாடல் என கூறப்படுகிறது. அதாவது காலத்தை மற்றும் காலநிலையை பெயரிடும் முறையில், இவ்வாறு அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் முழு நிலவு (Full Moon)-க்கு கொடுக்கப்பட்ட ஒரு பாரம்பரிய பெயர் தான் பிங் மூன் என கூறப்படுகிறது

Also Read: உலகளவில் வெறுக்கப்படும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம்: இந்தியா எந்த இடம்?

பவுர்ணமி ( FULL MOON ):

பிங் மூன் என்பது குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன்பு, பவுர்ணமி என்பது குறித்து தெரிந்து கொள்வது முக்கியம் என்று சொல்லலாம். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. இவ்வாறு, நிலவானது பூமியை சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வருகையில், சூரியனின் ஒளியானது, நிலா மீது படும் , ஒரு பக்கம் முழுவதும் படும் ஒளி , பூமியின் மீது படும். இதன் மூலம், நமக்கு பிரகாசமான நிலாவை நாம் காண முடிகிறது. இதைத்தான் பவுர்ணமி என அழைக்கிறோம்.


Pink Moon 2025: என்னது பிங் மூனா! அப்படினா என்ன?, எப்போது?, இந்தியாவில் தெரியுமா?

இந்த நிகழ்வானது தோராயமாக 29 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். சரி, பிங் என்பது குறித்து சற்று பார்ப்போம்.

பிங் மூன் பெயர் எப்படி வந்தது?

வட அமெரிக்காவின் ஆரம்பகால வசந்த கால மலர்களில் ஒன்றான மோஸ் பிங்க் என்று அழைக்கப்படும்  பூவானது பூத்து, அழகாக காட்சியளிக்கும். இந்த தருணத்தில்  உருவாகும் முழு நிலவை ( பௌர்ணமி ) இளஞ்சிவப்பு நிலவு  ( பிங் மூன் ) என்று அழைக்கப்படுகிறது.


Pink Moon 2025: என்னது பிங் மூனா! அப்படினா என்ன?, எப்போது?, இந்தியாவில் தெரியுமா?

 

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த முழு நிலவானது, பூமியில் இருந்து  வழக்கத்தை விட சற்று தூரமான தொலைவுக்கு செல்லும் என்று தகவல் தெரிவிக்கின்றன. ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவு இது என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவில் உள்ள அபோஜி என்ற தொலைவு பகுதியை அடைவதால் சிறியதாக தெரியும் என கூறப்படுகிறது.

அதனால் வழக்கமான பௌர்ணமியைவிட, இந்த பௌர்ணமி சற்று சிறியதாக தெரியும். ஆனால், வெறும் கண்ணால் கண்டறியக் கூடிய வகையில் அவ்வளவு சிறியதாக காட்சி அளிக்காது.


Pink Moon 2025: என்னது பிங் மூனா! அப்படினா என்ன?, எப்போது?, இந்தியாவில் தெரியுமா?

பிங் மூன், இந்தியாவில் எப்போது ஏற்படும்?

அமெரிக்காவை  பொறுத்தவரை, இது சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2025 அன்று இரவு 8:22 EDT மணிக்கு நிகழும். மேலும், இந்த பிங்க் மூன் இந்தியாவிலும் தெரியும். அதாவது ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 13, 2025 காலை 5:00 மணிக்கு இந்திய நேரப்படி நிகழும். இந்தியா முழுவதிலுமிருந்து சந்திரனைக் காணலாம். மேலும் சிறந்த பார்வைக்கு திறந்தவெளிகள், மலை உச்சி போன்ற ஒளி மாசுபாட்டிலிருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு சென்று பார்க்கும் சிறப்பான அனுபவத்தை உணரலாம் என வானியல் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

Also Read: அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget