மேலும் அறிய

பஹ்ரைனில் பரபரக்கும் பெகசஸ் பிரச்சினை: சமூக செயற்பாட்டாளர்களின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

பஹ்ரைன் நாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹ்ரைன் நாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகசஸ் ஒற்றறியும் செயலி ஏற்படுத்திய சர்ச்சையால் இந்தியாவில் அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரே முடங்கியது.

இந்நிலையில் தற்போது, பஹ்ரைன் நாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த பஹ்ரைன் செயற்பாட்டாளர்கள்?

பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் இருவர் இங்கிலாந்து நாட்டால் அடைக்கலம் கொடுக்கப்பட்டு அங்கு வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் ஃபோன்களும் கடந்த 2020ல் உளவு பார்க்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் ஃபோன்கள் பஹ்ரைன் அரசால் 2017ல் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வலைபதிவர்கள், சிலர் வாத் (Waad) உறுப்பினர்கள், சிலர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிலர் அல் வெஃபாக் அமைப்பினர்.

இது தொடர்பாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் அரசின் செய்தித்தொடர்பாளர் தி கார்டியன் பத்திகைக்கு அளித்துள்ள பேட்டியில், எங்கள் நாட்டின் மீது அடிப்படை ஆதாரமற்றது. யாரோ சிலரின் தவறான வழிகாட்டுதலால் எங்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் அரசு ஒவ்வொரு தனிநபரின் உரிமையையும் பேணிப் பாதுகாக்க முற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


பஹ்ரைனில் பரபரக்கும் பெகசஸ் பிரச்சினை: சமூக செயற்பாட்டாளர்களின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

பெகசஸ் பின்னணி:

இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய 'பெகசஸ்' ஸ்பைவேர் செயலி உளவு பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒற்றறியும் பெகசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் ஊடுருவி பயனர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்க முடியும்.

பெகசஸ் ஸ்பைவேர் முதன்முதலில் 2016ல் தான் வெளிச்சத்துக்கு வந்தது. முதன்முதலில் அரபு நாட்டு சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபோன் ஹேக் செய்யப்பட்டது. அப்போது பெகசஸ் ஐஃபோன்களை தாக்குவதாக கண்டறியப்பட்டது. உடனே ஆப்பிள் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு இந்த ஸ்பைவேரை எதிர்கொண்டது.

கிரேக்க புராணங்களில் பெகசஸ் என்பது ஒரு கற்பனைக் குதிரை. இப்போது நாம் கேள்விப்படும் இந்த பெகசஸ் நாம் கற்பனைகூட செய்துகொள்ள முடியாத அளவுக்கு பல இணைய தாக்குதல்களை செய்து வருகிறது. இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகசஸ் செயலி இப்போது இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget