மேலும் அறிய

Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?

ஒரு நாட்டில், புதிய விநோதமான அழுகை நோய் பரவி வருவதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.

காங்கோ நாட்டின் ஒரு பகுதியில் பரவிவரும் இனம்தெரியாத நோய் ஒன்று, இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நோய் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நோய்க்கு, அழுகையும் ஒரு அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

உயிர்பலி வாங்கும் விநோத நோய்

காங்கோ நாட்டின் வடமேற்கில் உள்ள ஈக்வேடியூர் மாகாணத்தில், இனம்தெரியாத புதிய நோய் ஒன்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், காங்கோவிலிருந்து சுமார் 120 மைல் தூரத்தில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் நோய் பரவல் தொடங்கியதாக கூறப்படுகிறது. அழுகை வருவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

போலோகோ, போமேட் என்ற அந்த இரண்டு கிராமங்களில், முதலில், போலோகோவில், வௌவால் சாப்பிட்ட 3 குழந்தைகள் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், போமேட் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மலேரியா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு கிராமங்களில் ஏற்பட்ட நோய்களுக்கான தொடர்பு ஏதும் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என WHO எனப்படும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்த இரண்டு கிராமங்களிலும், இந்த புதிய விநோத நோய்க்கான காரணம் குறித்து அதிகாரிகள் அய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோய் எதன் மூலம் பரவுகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன.?

இந்த நோய் தாக்கியவர்களில் பெரும்பாலானோருக்கு, குளிர் காய்ச்சல், உடம்பு வலி, பேதி போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு, மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி ஏற்படுவதாகவும், வியர்வை மற்றும் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில், 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயங்கர தாகமும், சிறுவர்கள், குழந்தைகள் தொடர்ந்து அழுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய, தற்போது காங்கோ அரசுடன் இணைந்து, உலக சுகாதார மையம் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! சாதிக்க என்ன இருக்கு? கைகளில் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! சாதிக்க என்ன இருக்கு? கைகளில் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! சாதிக்க என்ன இருக்கு? கைகளில் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! சாதிக்க என்ன இருக்கு? கைகளில் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
Embed widget