மேலும் அறிய

Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?

ஒரு நாட்டில், புதிய விநோதமான அழுகை நோய் பரவி வருவதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது.

காங்கோ நாட்டின் ஒரு பகுதியில் பரவிவரும் இனம்தெரியாத நோய் ஒன்று, இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நோய் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நோய்க்கு, அழுகையும் ஒரு அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

உயிர்பலி வாங்கும் விநோத நோய்

காங்கோ நாட்டின் வடமேற்கில் உள்ள ஈக்வேடியூர் மாகாணத்தில், இனம்தெரியாத புதிய நோய் ஒன்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், காங்கோவிலிருந்து சுமார் 120 மைல் தூரத்தில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் நோய் பரவல் தொடங்கியதாக கூறப்படுகிறது. அழுகை வருவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

போலோகோ, போமேட் என்ற அந்த இரண்டு கிராமங்களில், முதலில், போலோகோவில், வௌவால் சாப்பிட்ட 3 குழந்தைகள் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், போமேட் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மலேரியா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு கிராமங்களில் ஏற்பட்ட நோய்களுக்கான தொடர்பு ஏதும் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என WHO எனப்படும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்த இரண்டு கிராமங்களிலும், இந்த புதிய விநோத நோய்க்கான காரணம் குறித்து அதிகாரிகள் அய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோய் எதன் மூலம் பரவுகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன.?

இந்த நோய் தாக்கியவர்களில் பெரும்பாலானோருக்கு, குளிர் காய்ச்சல், உடம்பு வலி, பேதி போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு, மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி ஏற்படுவதாகவும், வியர்வை மற்றும் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில், 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயங்கர தாகமும், சிறுவர்கள், குழந்தைகள் தொடர்ந்து அழுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய, தற்போது காங்கோ அரசுடன் இணைந்து, உலக சுகாதார மையம் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget