மேலும் அறிய

செல்போனை விழுங்கிய கைதி... 6 மாதம் கழிப்பறையில் காத்திருப்பு... கடைசியில் அறுவை சிகிச்சையில் அகற்றம்!

வயிற்றுவலியால் அவதிப்பட்ட கைதிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றினுள் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அஸ்வான் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகள் நடத்திய பிறகு அவர் வயிற்றுக்குள் வித்யாசமாக ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. உடனே அறுவை சிகிச்சைக்கு தயார் செய்த மருத்துவர்கள் உள்ளே ஒரு செல்போன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அந்த கைதி ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கியுள்ளார். இதனால் அந்த கைதியின் உடலில் உணவு செரிமானம் செய்வதை செல்போன் தடுத்துள்ளது. மேலும் அவரின் வயிறு மற்றும் குடல் வீக்கம் அடைந்துள்ளது. இரண்டு மணி நேர நீண்ட சிகிச்சைக்கு பிறகு போனை வயிற்றிலிருந்து அகற்றி, கைதியின் உயிரை மருத்துவர்கள் காப்பற்றிவிட்டனர்.

செல்போனை விழுங்கிய கைதி... 6 மாதம் கழிப்பறையில் காத்திருப்பு... கடைசியில் அறுவை சிகிச்சையில் அகற்றம்!

மருத்துவர்கள் ஏன் செல்போனை விழுங்கினார் என்று தெரியாததால் வினோத வழக்கு என பெயரிட்டு இந்த அறுவை சிகிச்சையை நடத்தி முடித்திருக்கின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு அந்த கைதியிடம் எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து வரலாம், ஏனென்றால் செல்போன் பேட்டரிகளில் உள்ள பல கெமிக்கல்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர். சிகிச்சைக்கு பிறகு கைதி சீரான உடல்நலத்துடன் உள்ளார் என்று மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் மொஹமது எல் தஷவுரி, "இது போல முழு செல்போனை விழுங்கி அறுவை சிகிச்சை செய்து எடுப்பது இதுவே முதல்முறை, பொதுவாக மேற்கத்திய உடல்களுக்கு இதுபோன்ற பொருட்களை அப்படியே விழுங்கி உடனடியாக வெளியில் எடுத்துக்கொள்ளும் தன்மை உள்ளது, பத்தில் இருந்து இருபது சதவிகிதம் வரை என்டோஸ்கோப்பி மூலம் எடுக்க வேண்டி வருகிறது, மற்றும் ஒரு சதவிகிதம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வருகிறது, விழுங்கியதை செரிமானம் செய்ய முடியாத அளவிற்கு பெரிது அது, அதனால் தான் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார், செல்போன் பேட்டரியில் உள்ள ஆசிட் உடலுக்கு எப்போது வேண்டுமானாலும் தீங்கு விளைவிக்கலாம்" என்று கூறினார்.

செல்போனை விழுங்கிய கைதி... 6 மாதம் கழிப்பறையில் காத்திருப்பு... கடைசியில் அறுவை சிகிச்சையில் அகற்றம்!

ஆனால் உண்மையில் அவர் செல்போனை விழுங்கிய காரணம் சிறைக்குள் செல்போனை பயன்படுத்த கூடாது என்பதால், அவர் வயிற்றை லாக்கராக பயன்படுத்தி வந்திருக்கிறார். அடிக்கடி செல்போனை விழுங்கி பின்னர் காலையில் தானாக வெளியே வந்ததும் எடுத்துக்கொள்வாராம். இதுகுறித்து போலீசார் கூறுகையில் “இந்த கைதி அடிக்கடி செல்போனை விழுங்கி பின்னர் மலம் கழிக்கும்போது அதனை வெளியில் எடுப்பார். ஆனால் இந்த முறை அவரால் அதை எடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் அந்த செல்போனை பிளாஸ்டிக் பையில் போட்டு விழுங்கி இருக்கிறார். இதனால் அவருடைய செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட செல்போனை மருத்துவ குழுவினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget