மேலும் அறிய

கொந்தளிப்புக்கு மத்தியில்...இலங்கை திரும்பியுள்ள கோட்டபய ராஜபக்ச... கைது செய்யப்படுவாரா?

இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை அன்று நாடு திரும்பி உள்ளார்.

இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை அன்று நாடு திரும்பி உள்ளார். இதை அந்நாட்டின் விமான நிலைய அலுவலர் ஒருவர் உறுதி செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கையில் இருந்து 7 வாரங்களுக்கு முன்பு கோட்டபய ராஜபக்ச வெளியேறினார்.

முக்கிய விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய கோட்டபய ராஜபக்சவை அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் மலர் கொத்து வழங்கி வரவேற்றுள்ளனர். அவர் தற்போதும் இலங்கையில் செல்வாக்கு செலுத்தி வருவது இதன் மூலம் தெரிய வருகிறது. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "விமானத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு மாலை அணிவிக்க அரசு தலைவர்களின் கூட்டம் அலைமோதியது" என்றார்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அவரைக் குற்றம் சாட்டி பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மக்கள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஜூலையின் மத்தியில் இலங்கை ராணுவப் பாதுகாப்புடன் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் தாய்லாந்து செல்வதற்கு முன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாடு திரும்புவதற்கு தேவையானவற்றை செய்து தருமாறு புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

73 வயதான கோட்டபய ராஜபக்ச பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வணிக விமானத்தில் இலங்கை வந்தார். தானாக முன்வந்து நாட்டு விட்டு வெளியேறிய அவர் தற்போது அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், "அவர் தாய்லாந்து ஹோட்டலில் கிட்டத்தட்ட கைதி போல வசித்து வருகிறார். மேலும் திரும்பி வர ஆர்வமாக இருந்தார். 

கோட்டபய நாடு திரும்பிய பிறகு அவரைப் பாதுகாக்க புதிய பாதுகாப்புப் பிரிவை உருவாக்கியுள்ளோம். இந்த பிரிவு இராணுவம் மற்றும் போலிஸ் கமாண்டோக்களின் கூறுகளை உள்ளடக்கியது" என்றார்.

ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பத்தை விக்ரமசிங்கே பாதுகாப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளன. இலங்கையின் அரசியலமைப்பு கோத்தபய மற்றும் அவரது மூத்த சகோதரரும் முன்னாள் அதிபருமான மஹிந்த உள்ளிட்ட முன்னாள் அதிபர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்கள், வாகனம் மற்றும் வீடுகளை உத்தரவாதப்படுத்துகிறது.

கோட்டாபய ராஜபக்சவின் ராஜினாமா, அதிபராக இருந்த போது அவர் அனுபவித்து வந்த அதிகாரங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு பிரபல பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையில் அவரது பங்கு உள்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுப்போம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Gaza Hamas Vs Israel: “ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
“ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
Delhi Bomb Blast: “டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
“டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Gaza Hamas Vs Israel: “ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
“ஆயுதத்த கீழ போடு, இல்லைன்னா போட வைப்போம்“ - ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Rahul Vs Shakeel Ahmad: “ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
“ஓட்டு திருட்டு புகாரில் உண்மை இல்லை“; ராகுலுக்கு சொந்த கட்சியிலிருந்தே வந்த ஆப்பு - என்ன நடந்தது.?
Delhi Bomb Blast: “டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
“டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்“: என்ஐஏ அறிவிப்பு - உதவிய ஒருவன் கைது
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கொட்டித் தீர்க்கும்! புதுச்சேரி, காரைக்காலில் என்ன நிலை?
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கொட்டித் தீர்க்கும்! புதுச்சேரி, காரைக்காலில் என்ன நிலை?
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
Thalaivar 173: ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு உண்மையான காரணம் இதுதானா?
Thalaivar 173: ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு உண்மையான காரணம் இதுதானா?
2026 தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை போட்டி? அமைச்சரவையில் இடம்பிடிப்பாரா? - அவர் சொல்வது என்ன !
2026 தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மதுரை போட்டி? அமைச்சரவையில் இடம்பிடிப்பாரா? - அவர் சொல்வது என்ன !
Embed widget