மேலும் அறிய

King Charles : மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சி...அதிர்ந்து போன மக்கள்...யார் அந்த மர்ம நபர்..?

ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மன்னரும் ராணியும் யார்க்கிற்கு சென்றனர்.

பிரிட்டனில் யார்க் நகரத்தில் நடைபயணத்தின் போது மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டைகளை வீச முயன்ற ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இன்று, சார்லஸ் மன்னரின் வருகைக்காக நகரத்தில் உள்ள மிக்லேகேட் பாரில் அமைக்கப்பட்ட தற்காலிக வேலிக்குப் பின்னால் போலீஸ் அதிகாரிகள் அந்த சந்தேக நபரை தரையில் தள்ளி தடுத்து நிறுத்தினர்.

மன்னரையும் ராணியையும் தலைவர்கள் யார்க்கிற்கு வரவேற்றனர். அப்போது, ஒரு எதிர்ப்பாளர் அவர்கள் மீது மூன்று முட்டைகளை எறிந்தார். ஆனால், அவை அவர்கள் மீது படவில்லை. இதையடுத்து, மன்னரும் ராணியும் அந்த இடத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

 

அந்த நபர் முட்டைகளை எறிந்தபோது அரச குடும்பத்தாரை நோக்கி கத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. "இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது" என்றும், "மன்னரால் அல்ல" என்றும் அவர் கூச்சலிடுவது பதிவாகியுள்ளது. சுமார் நான்கு காவல்துறை அதிகாரிகள், அவரை தடுத்தி நிறுத்தி பிடித்தனர்.

கூட்டத்தில் இருந்த சிலர் "கடவுளே ராஜாவை காப்பாற்றுங்கள்" என்று கோஷமிட்டனர். மற்றவர்கள் எதிர்ப்பாளர் மீது "வெட்கப்படுங்கள்" என்று கூச்சலிட்டனர். மன்னரை வரவேற்கும் குழுவில் இடம்பெற்ற யார்க் நகரத்தின் தலைமை செயல் அதிகாரி, மன்னர் மீது வீசப்பட்ட முட்டைகளில் ஒன்றை தடுத்தார்.

போலிஸார், அந்த நபரை தடுத்து நிறுத்தியபோது, ​​சார்லஸ் எந்த வித பதற்றமும் இன்றி, மக்களிடம் உரையாடினார். மன்னரை நகரத்திற்கு வரவேற்கும் பாரம்பரிய நிகழ்வின்போது இச்சம்பவம் அரங்கேறியது.

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மன்னரும் ராணியும் இன்று யார்க்கிற்கு சென்றிருந்தனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் யார்க்கிற்கு சென்றனர். இது, அவரது மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட முதல் சிலையாகும்.

யார்க் மினிஸ்டரில் நடந்த விழாவில் பேசிய சார்லஸ், "மறைந்த ராணி தனது வாழ்நாளில் தனது மக்களின் நலனுக்காக எப்போதும் விழிப்புடன் இருந்தார். வரப்போகும் நூற்றாண்டுகளுக்கு அவரின் சிலை ராணி எலிசபெத் சதுக்கமாக மாற போகிறது" என்றார்.

 

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.