மேலும் அறிய

"காசா மீது அணுகுண்டை வீசுவோம்" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அலறவிட்ட அமைச்சர்

இஸ்ரேல் போரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்த செல்ல முனைப்பு காட்டி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே, இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பகுதியான காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 9,480க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனிதத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

இஸ்ரேல் மீது சுமத்தப்படும் போர் குற்றங்கள்:

போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் அவசர உதவிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன. போர் குற்றத்தில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், காசா மீது அணுகுண்டை வீசுவோம் என தீவிர வலதுசாரியும் இஸ்ரேல் அமைச்சருமான அமிஹாய் எலியாஹு தெரிவித்திருப்பது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேடியோ கோல் பிரமா என்ற இஸ்ரேலிய ரேடியோ ஸ்டேசனுக்கு நேர்காணல் அளிக்கையில், காசா மீது அணுகுண்டு வீசப்படுமா என கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "அதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது" என கூறினார். அதுமட்டும் இன்றி, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். "நாஜிகளுக்கு மனிதாபிமான உதவியை வழங்க விட மாட்டோம். காசாவில் மற்றவர்களை உணர்வுப்பூர்வமாக மதிக்கும் அப்பாவிகளே கிடையாது" என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதற்றத்தை உண்டாக்கிய இஸ்ரேல் அமைச்சர்:

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே, அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வரும் சூழலில் அண்குண்டை வீசினால் அது ஒட்டுமொத்த காசாவையும் உருகுலைத்துவிடும். இஸ்ரேல் போரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்த செல்ல முனைப்பு காட்டி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே, இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அமைச்சரவையில் இருந்து அமிஹாய் எலியாஹு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "அமைச்சரின் கருத்து யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின் மிக உயர்ந்த தரத்தின்படி செயல்படுகின்றன. வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் அதைத் தொடருவோம்" என்றார்.

இதற்கிடையே, தன்னுடைய சர்ச்சை கருத்துகளுக்கு விளக்கம் அளித்துள்ள அமிஹாய் எலியாஹு, "அணுகுண்டு பற்றிய எனது கருத்து உருவகமாக பயன்படுத்தினேன் என்பது உணர்வுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இருப்பினும், பயங்கரவாதத்திற்கு வலுவான,  சமமற்ற பதில் நிச்சயமாக தேவைப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு மதிப்பில்லை என்பது இதன் மூலம் நாஜிக்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தெளிவுப்படுத்தப்படும்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget