USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: அமெரிக்கா காரணமே இல்லாதை நிபந்தனைகளை எல்லாம் விதித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.

USA Iran War: அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஈரான் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அறிவித்துள்ளார்.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையானது, காரணமே இல்லாமல் அமெரிக்கா மும்வைத்த நிபந்தனைகளால் தோல்வியில் முடிந்ததாக ஈரான் அறிவித்துள்ளது. அந்நாட்டின் அரசாங்க ஊடகம் டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானிய மக்களை நலன்களை காப்பதை கருத்தில் கொண்டு எங்களது குழு 21 மணி நேரம் நீண்ட தீவிரமான பேச்சுவார்த்தையை நடத்தியது. எங்கள் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதை தடுத்தன. இதனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த முடிவும் எட்டவில்லை - அமெரிக்கா
ஈரான் குழுவுடன் 21 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். 3 சுற்றுகளாக நடந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “எங்களது நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை. நல்ல நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அமெரிக்கா போடும் நிபந்தனைகள் என்ன?
- ஈரானிடம் ஏற்கனவே இருந்த அணு ஆயுத திட்டங்கள் மற்றும் செறிவூட்டல் மையங்களை அழித்துவிட்டோன். எனவே இனியும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கமாட்டோம் மற்றும் எதிர்காலத்தில் அதனை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடமாட்டோம் என ஈரான் உறுதி அளிக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது
- ஹார்மஸ் நீர்வழிப்பாதையை எந்தவித நிபந்தனைகள் மற்றும் கட்டணங்களும் இன்றி வணிக கப்பல்களின் போக்குவரத்திற்கு திறந்துவிட வேண்டும் எனவும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளதாம்
- லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தனிப்பட்ட நடவடிக்கை. அதனை அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்துகிறதாம்
- இதுபோக, ஈரானுக்கு எதிரான பொருளதார தடைகளை நீக்குவதோடு, போரால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும்
- அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிப்பது மற்றும் ஈரான் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவது போன்ற ஈரானின் கோரிக்கைகளையும் அமெரிக்கா ஏற்க மறுத்ததுமே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற காரணமாக கூறப்படுகிறர்து
தோல்வியில் முடிந்த எதிர்பார்ப்பு..
கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகமான கால இடைவெளிக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த முதல் நேரடி பேச்சுவார்த்தையாகவும், கடந்த 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இருதரப்புக்கும் இடையே நடந்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையாகவும் இது அமைந்தது. இதன் மூலம் மாதத்திற்கும் மேலாக நடந்த ஆயிரக்கணக்கானோர் பலியான இந்த போர் விரைவில் முழுமையாக முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















