மேலும் அறிய

நாளை முதல் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் தற்காலிக மூடல்.. - அரசு அதிரடி உத்தரவு...! காரணம் என்ன?

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த வாரம் முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த வாரம் முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. 

எரிவாயு பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து தவித்து வரும் இலங்கையில், பொது போக்குவரத்தில் மக்கள் கூட்டத்தை குறைக்க வீட்டிலிருந்து பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என அரசு மற்றும் கல்வித்துறை ஊழியர்களை இலங்கை அரசு கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையை பொது நிர்வாகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய சேவை துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இம்மாதிரியான விடுமுறை நாள்களில் வீட்டில் தோட்டக்கலை மேற்கொண்டு குறுகிய கால பயிர்களை பயிரிட்டு உணவு பற்றாக்குறை தீர்க்க வேண்டும் என அரசு ஊழியர்களை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக உள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாத பார்க்கப்படுகிறது. 

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர் சரிவை சந்தித்து வருவது அங்கு நிலைமையை மோசப்படுத்தியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினர் தவறாக பொருளாதாரத்தை கையாண்டதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்து வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அங்கு அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, விவசாயிகளை படுகுழியில் தள்ளியது.

பல மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டம், பிரதமராக பொறுப்பு வகித்த மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விலக செய்தது. ஆனால், அதிபர் பதவியிலிருந்து விலகுவதில்லை என்பதில் கோத்தபய உறுதியாக இருந்தார். நட்பு நாடுகளிடம் உதவிகளை பெறவும் சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு நாட்டின் கடனை சீர் செய்ய புதிய பிரதமரை நியமித்தார்.

புதிய பிரதமராக பொறுப்பு ஏற்று கொண்ட விக்ரமசிங்க, "அடுத்த ஆறு மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய நாட்டிற்கு 5 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் நமது அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அதில் பெரும்பகுதி எரிபொருள் வாங்குவதை நோக்கிச் செல்கிறது. ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டாலர் எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது" என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget