மேலும் அறிய

China Vs Japan: மிரட்டிய சீனா; எச்சரித்த ஜப்பான் பிரதமர்; தைவான் விவகாரத்தில் மோதல் - என்ன நடக்குது அங்க.?

சீனா, தைவான் கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி அச்சுறுத்தப் பார்த்தால், ஜப்பானும் படைகளை நிறுத்தும் என அந்நாட்டு பிரதமர் தகாய்ச்சி கூறியதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தைவான் கடல் பகுதியில் சீனா தனது போர் கப்பல்களை நிறுத்தி அச்சுறுத்த முயற்சித்தால், அதை எதிர்கொள்ள ஜப்பானும் படைகளை நிறுத்தும் என அந்நாட்டு பிரதமர் சனே தகாய்ச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, சீனாவை ஆத்திரமடை யச் செய்துள்ளது. இதையடுத்து, ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என சீன மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசியபோது பரபரப்பை கிளப்பிய தகாய்ச்சி

ஜப்பானில், அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி பதவியேற்றார். இந்நிலையில், தைவான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 7ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் தகாய்ச்சி பங்கேற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், 'தைவான் பிராந்தியத்தில் ஒருவேளை ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலை உண்டானால், ஜப்பான் தற்காப்புக்காக படைகளை அனுப்புமா என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த தகாய்ச்சி, அவர் கேட்டது ஒரு கற்பனை நிலை என்றாலும், தைவான் கடல் பகுதியில் சீனா போர் கப்பல்களை நிறுத்துவது, மற்றொரு நாட்டின் பலவீனத்தை பயன்படுத்துவது போன்றவற்றை செய்தால், அது ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.

மேலும், அந்த அச்சுறுத்தல் தாக்குதலாக மாறினால், தற்காப்புக்காக படைகளை நிறுத்தும் உரிமையை நாம் பயன்படுத்துவோம் என தகாய்ச்சி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகாய்ச்சியின் பேச்சால் கோபமடைந்த சீனா

அதோடு, தகாய்ச்சியின் இந்த பேச்சு, சீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. எனினும், தான் பேசியதை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி உறுதிபடத் தெரிவித்துவிட்டார். இருந்தாலும், எதிர்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, சில விவகாரங்களை பற்றி குறிப்பிடுவதை தவிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

தைவான், ஜப்பானுக்கு மிக அருகில் உள்ள ஒரு பகுதி. இதை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகவும், ஒரே சீனா என்ற கொள்கையின் கீழ் உள்ளதாகவும் சீனா கூறுகிறது. மேலும், அடிக்கடி அங்கு போர்க் கப்பல்களை நிறுத்துவது, போர் விமானங்களை அனுப்புவது என, தைவானை சீனா மிரட்டி வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி கூறிய கருத்து, தங்கள் இறையாண்மைக்கு எதிரானதாக சீனா கருதுகிறது. இதையடுத்து சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங், சீனாவுக்கான ஜப்பான் துாதரை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார். இதேபோல் சீன ராணுவமும் மிரட்டும் வகையில் செய்தி வெளியிட்டது.

ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் - மக்களுக்கு அறிவுறுத்திய சீன அரசு

இதற்கிடையே, சீன மக்கள் யாரும் வரும் நாட்களில் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என்றும், தைவான் பற்றிய ஜப்பானின் ஆபத்தான கருத்துக்களால் சீனர்களுக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், ஜப்பானுக்கான சீன துாதரகம் அறிவித்துள்ளது. மேலும், ஜப்பானுக்கு சென்று படிக்கும் திட்டம் இருந்தால், அதை மறுபரிசீலனை செய்ய, தங்கள் நாட்டு மாணவர்களுக்கு சீன அரசின் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
Embed widget