மேலும் அறிய

"காசாவில் நடப்பது போர் அல்ல.. இனப்படுகொலை" - இஸ்ரேலுக்கு எதிராக கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா!

காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக இஸ்ரேல் மீது பிரேசில் அதிபர் லூலா குற்றம் சுமத்தியுள்ளார்.

காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 29,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா. இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திய அவர், காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபாவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டு நேற்று நிறைவடைந்தது.

உச்சி மாநாட்டை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேசில் அதிபர் லூலா, "காசாவில் நடப்பது போர் அல்ல. அது, இனப்படுகொலை. ராணுவ வீரர்களுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்தும் போர் அல்ல. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தயார் நிலையில் இருக்கும் ராணுவம் நடத்தும் போர்" என்றார்.

கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா:

பிரேசில் அதிபர் லூலாவின் கருத்துக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், வெட்கக்கேடான, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் விமர்சித்துள்ளார். மேலும், பிரேசில் தூதருக்கு விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாலஸ்தீன பகுதியான வெஸ்ட் பேங்க், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இருக்கும் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெஸ்ட் பேங்கில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருவதாகவும் இதை விட மோசமான நிலை ஏற்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

4 மாதங்களாக நடந்து வரும் போரால் காசாவின் மொத்த மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர், அதாவது 24 லட்சம் பேர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானோர் முகாம்களில் வசிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து! நுபூர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து அரசியல் தலைவர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget