மேலும் அறிய

Bangladesh protest: கலவரக் களமான வங்கதேசம் - கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவு, இந்தியர்களின் நிலை என்ன?

Bangladesh protest: வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Bangladesh protest: வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

கண்டதும் சுட உத்தரவு:

வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மத்தியில் குறைந்தது 115 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை காலை வரை கடுமையான நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாரேனும் பொதுவெளியில் நடமாடினால் அவர்களை கண்டதும் சுட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியர்களின் நிலை என்ன?

வங்கதேசத்தில் நடந்த வன்முறை போராட்டங்களை அந்நாட்டின் "உள்விவகாரம்" என்று இந்தியா விவரித்துள்ளது.  ஆனால் 15,000 இந்தியர்கள் அங்கு வசிக்கும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், 8,500 மாணவர்கள் உட்பட 15,000 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து 88 இந்தியர்கள் மேகாலயா வழியாக திரும்பினர். வெள்ளிக்கிழமை, இந்தியர்கள் மற்றும் நேபாளர்கள் உட்பட 363 பேர் மேகாலயாவின் டாவ்கி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக திரும்பினர். இதுவரை ஆயிரம் மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், 4 ஆயிரம் பேருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வன்முறைக்கான காரணம் என்ன?

1971 இல் வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதம் வரை ஒதுக்கப்பட்ட, இடஒதுக்கீடு முறையை நிறுத்தக் கோரி மாணவர் குழுக்களால் தொடங்கப்பட்ட போராட்டம் தற்போது வன்முறையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2009 முதல் ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு, இது போராட்டம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய மக்கள் புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல்:

  • டாக்கா மற்றும் பிற நகரங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் காவல்துறையினரும் எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டதை அடுத்து வன்முறையை அடக்குவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இந்திய ரயில்வே சனிக்கிழமையன்று கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா மற்றும் குல்னா இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் உட்பட வங்காளதேசத்திற்கு இரண்டு ரயில்களையும் ரத்து செய்தது.
  • ஜூலை 19, இதுவரை நடந்த போராட்டங்களில் மிகக் கொடிய நாள் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 43 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
  • இணையம் மற்றும் மொபைல் சேவைகள் தடைசெய்யப்பட்டதன் மூலம் ஆன்லைன் தகவல்தொடர்புகள் வியாழக்கிழமை முதல் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஒளிபரப்பாகவில்லை.
  • பெரும்பாலான உள்ளூர் செய்தித்தாள்களின் வலைத்தளங்களும் மூடப்பட்டன. 
  • வங்கதேச மத்திய வங்கி மற்றும் PMO இன் இணையதளமும் ஹேக் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டன.
  • எதிர்ப்பாளர்கள் சிறைச்சாலை வளாகத்தையும் தாக்கி, ஜூலை 19 அன்று தீ வைத்து எரித்தனர், நர்சிங்டியில் சுமார் 800 கைதிகள் தப்பியோடினர்.
  • கோட்டா அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது என்றும், அவரது கட்சி சுதந்திர இயக்கத்தை வழிநடத்தியது என்றும் போராட்ட மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் தகுதி அடிப்படையிலான முறையைக் கோருகின்றனர்.
  • போர் வீரர்கள் எந்த அரசியல் சார்பற்றவராக இருந்தாலும் அவர்களின் பங்களிப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று ஹசீனா இடஒதுக்கீடு முறையை ஆதரிக்கிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget