மேலும் அறிய

அம்மா ஒருத்தர கொலை பண்ணாங்க.! 43 ஆண்டுகளுக்கு பின் வந்த போன்கால்.. பரபரப்பான போலீஸ்!

ஒரு கொலை வழக்கில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சமீப காலங்களாக கொலை மற்றும் பாலியல் குற்ற சம்பவங்கள் மரபணு பரிசோதனை வைத்து அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இந்த முறையில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எப்படி இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளை நெருங்கினர்?

அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் கிளாரன்ஸ் சியட்ஸ். இவர் 1976ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முடி திருத்தும் கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் நீண்ட நாட்கள் தேடியும் அவர் குறித்த எந்தவித துப்பும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. 

இதனால் இந்த வழக்கு தொடர்பாக கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்துள்ளனர். அவர்களுக்கும் எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டு பெண் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அந்த விஷயம் தான் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை அளித்துள்ளது. அந்தப் பெண், “1970களில் நான் 10வயதாக இருந்த போது குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தேன். அப்போது என்னுடைய தாயின் ஆண் நண்பர் ஒருவரின் சடலத்தை வெட்டி புதைத்து கொண்டிருந்தார். அதை நான் பார்த்தேன். ஆனால் நீண்ட நாட்களாக எனக்கு அதை வெளியே சொல்ல தைரியம் வரவில்லை. ஆனால் தற்போது அதை கூறவேண்டும் என்று நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 


அம்மா ஒருத்தர கொலை பண்ணாங்க.! 43 ஆண்டுகளுக்கு பின் வந்த போன்கால்.. பரபரப்பான போலீஸ்!

அந்தப் பெண் கூறிய விஷயங்கள் அனைத்தும் கிட்டதட்ட சியட்ஸ் வழக்குடன் ஒத்து போனதால் காவல்துறையினருக்கு ஒரு பெரிய துருப்புச் சீட்டாக அந்த தகவல் அமைந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் கூறிய இடத்தில் காவல்துறையினர் தோண்டி அங்கு இருந்த எலும்புகளை எடுத்துள்ளனர். அந்த எலும்பை பரிசோதனை செய்தததில் அது சியட்ஸ் உடைய எழும்பு தான் என்பது தெரியவந்தது. ஆனால் காவல்துறையினருக்கு மேலும் ஒரு பெரிய சவால் இருந்தது. சியட்ஸை இப்படி துண்டு துண்டாக வெட்டியது யார் என்று அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. 

2019ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 2 ஆண்டுகளாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மரபணு பரிசோதனை ஆகியவற்றை செய்து வந்துள்ளது. எனினும் கொலையாளியை காவல்துறையினரால் நெருங்க முடியவில்லை. இறுதியில் ஒரு தனியார் நிறுவனம் வைத்திருந்த மரபணு மாதிரிகளுடன் இந்த குற்றச்சம்பவத்தில் கிடைத்த மரபணு ஒத்து போகியுள்ளது. இதைத் தொடர்ந்து மோட்டா என்ற நபரை காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். அவர் 1970களில் அந்தப் பகுதியில் ஒரு முடி திருத்தும் கடை வைத்திருந்துள்ளார். அந்த கடைக்கு செல்லும் போது தான் சியட்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனால் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் உரிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க:29 மணி நேர ஏலத்தில் ரூ.18.5 லட்சத்துக்கு ஏலம் போன வைரல் நாய்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.