மேலும் அறிய

பாகிஸ்தான் குறித்து வாய் விட்ட ராஜ்நாத் சிங்: அமெரிக்கா பரபர கருத்து!

பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகளை கொல்வோம் என ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், பாகிஸ்தான் தொடர்பாக பாஜக தலைவர்கள் பேசுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

பரபரப்பை கிளப்பிய ராஜ்நாத் சிங் கருத்து:

பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என அவர் கூறியிருந்தார். சில நாள்களக்கு முன்பு பிரதமர் மோடியும் இதே போன்றதொரு கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் புகுந்து 20 பயங்கரவாதிகளை இந்திய புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றதாக தி கார்டியன் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

தனியார் செய்தி நிறுவனத்துடனான நேர்காணலின்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "அண்டை நாட்டிலிருந்து வரும் பயங்கரவாதிகள் பாரதத்தில் அமைதியை குலைக்க முயன்றாலோ அல்லது பாரதத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றாலோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழைவோம்" என்றார்.

"இந்திய, பாகிஸ்தான் பிரச்னைக்கு நடுவே வர மாட்டோம்"

பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங்கின் கருத்து தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. பிரச்னை கை மீறி போவதை தவிர்த்து, பேச்சுவாரத்தையின் மூலம் தீர்வு காண இந்திய, பாகிஸ்தான் நாடுகளை ஊக்குவிக்கிறேன் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக விரிவாக பதில் அளித்த மேத்யூ மில்லர், "நான் முன்பே கூறியது போல் அமெரிக்கா இந்த பிரச்னைக்கு நடுவே வரப் போவதில்லை. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பிரச்னை தீவிரமடைவதைத் தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்றார்.

காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல இந்திய சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றச்சாட்டு முன்வைத்தது. அமெரிக்க குடிமகனான பன்னூனை கொல்ல முயற்சித்ததாக நிகில் குப்தா என்பவரை அமெரிக்க காவல்துறை காவலில் வைத்துள்ளது.

இந்தியா மீது பொருளாதார தடையா?

பன்னூன் கொலை முயற்சி விவகாரத்தில் இந்தியாவுக்கு பொருளா தடை விதிக்க அமெரிக்க திட்டமிட்டு வருகிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், "யார் மீது தடை விதிப்போம் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால், தடைகள் தொடர்பாக நீங்கள் என்னைக் கேட்டால், நாங்கள் அதை பற்றி வெளிப்படையாக விவாதிக்க தயாராக இல்லை" என்றார்.

ராஜ்நாத் சிங் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினை ஆற்றியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தந்த பதிலடியில், "மிகையான தேசியவாத உணர்வுகளை தூண்ட வெறுப்பு பேச்சு பேசுவது இந்திய அரசாங்கத்திற்கு வழக்கமாகிவிட்டது. எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி தேர்தல் ஆதாயத்திற்காக இம்மாதிரியான செயல்களை செய்கிறது" என விமர்சித்திருந்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி! 
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
ஆரோவிலில் எம்.பி திக்விஜய் சிங் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு! மாத்ரிமந்திர், ஏரி திட்டம் உட்பட முக்கிய தகவல்கள்!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
Sivakarthikeyan: குடும்ப ரசிகர்களை இழக்கப்போகும் சிவகார்த்திகேயன்.. என்னடா மதராஸிக்கு வந்த சோதனை!
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
திமுக-வினருக்கு காத்திருக்கும் பரிசு.. முக ஸ்டாலின் கையில் எடுத்த புது வியூகம் - என்ன தெரியுமா?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
காஞ்சிபுரம்: கழிவுநீர் பிரச்னைக்கு எதிராக களமிறங்கிய பெண் கவுன்சிலர்! கதறும் அதிகாரிகள்? மக்கள் நிலை என்ன?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழக ஆசிரியர்களுக்கு கிடைத்த பெருமை! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
சிறப்பு பட்டிமன்றம் முதல் டிடி நெக்ஸ்ட் வரை.. ஜீ தமிழில் விநாயகர் சதுர்த்திக்கு இதுதான் போட்றாங்க..!
சிறப்பு பட்டிமன்றம் முதல் டிடி நெக்ஸ்ட் வரை.. ஜீ தமிழில் விநாயகர் சதுர்த்திக்கு இதுதான் போட்றாங்க..!
Embed widget