மேலும் அறிய

கொரோனாவால் ஏற்படுகிறதா புதிய மூளை நோய்? நோயாளியின் மர்ம மரணத்தால் அதிர்ச்சி

கொரோனா ஓய்ந்துவிட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கம் உலகம் முழுவதும் இன்னும் எதிரொலித்து கொண்டுதான் இருக்கிறது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பின்விளைவுகளை ஏற்படுத்துகிறதா கொரோனா?

கொரோனா ஓய்ந்துவிட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கம் எதிரொலித்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா காரணமாக முடி கொட்டுவதாகவும், பாதிக்கப்படுவர்களுக்கு குழப்பமான மன நிலை ஏற்படுவதாகவும் மறதி அதிகரிப்பதாகவும், கவனக்குறை ஏற்படுவதாகும் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை கூறுகின்றனர். விறைப்புத்தன்மை கூட ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

Chandramukhi 2: சந்திரமுகி குறித்து நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ஜோதிகா.. மிரண்டுபோன ரஜினி.. என்ன நடந்தது?

இந்த நிலையில், நியூயார்க் நகரில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்திருப்பது பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. நடக்க சிரமப்பட்டு வந்த 62 வயது நபருக்கு மூளைநோயுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் குயின்ஸ் மருத்துவமனை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

நோயாளிக்கு இறுதியில் ப்ரியான் (மூளையில் புரத துகள்களால் ஏற்படும் நோய்) நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா காரணமாக அவருக்கு மூளை நோய் ஏற்பட்டிருக்குமோ? என சந்தேகம் கிளம்பியுள்ளது. நோயாளிக்கு சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

கொரோனாவால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறதா?

ஒரு முறை அல்ல. இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டு முறையும் அவர் நன்றாக இருப்பதாக முடிவுகள் வந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

இதுகுறித்து மருத்தவர்கள் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 3 வாரங்களில், நோயாளிக்கு படிப்படியாக பேச முடியாமல் போனது. மென்மையான உணவுகளை விழுங்குவதில் கூட சிரமப்பட்டார். PEG [பெர்குடேனியஸ் எண்டோஸ்கோபிக் காஸ்ட்ரோஸ்டமி] குழாய் வைக்க வேண்டியிருந்தது. நரம்பு பிடிப்பு, பக்கவாதம் ஏற்பட்டு இறுதியில் உயிரிழந்தார்" என்றார்கள்.

அவரை தாக்கிய கொரோனாவுக்கும் நரம்புத் தளர்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கோவிட்-19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து மூளை நோயால் நோயாளி இறப்பது இது முதல் முறை அல்ல. கொரோனா வைரஸ் தோன்றியதிலிருந்து குறைந்தது மூன்று முறையாவது இது நடந்துள்ளது என்று மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: Asian Games 2023: தாத்தா வழியில் தந்தை.. தந்தை வழியில் மகள்... தலைமுறை தலைமுறையாக பதக்கத்தை வெல்லும் குடும்பம்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget