மேலும் அறிய

Indonesia Earthquake: இந்தோனேஷியா - பாலி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 7-ஆக பதிவு..

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனிசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு மிகவும் ஆழமாக ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும், கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் மக்களால் லேசான அதிர்வுகளை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்?

இந்தோனேசியா, 27 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் ஆகும். பசிபிக் பெருங்கடலை வளைக்கும் எரிமலைகள் மற்றும் தவறான கோடுகளின் வளைவான "ரிங் ஆஃப் ஃபயர்" மீது இதன் இருப்பிடம் அமைந்துள்ளதால், இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேசியாவில் கடைசியாக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ஆக  ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 340 பேர் உயிரிழந்தனர். அதோடு 7,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் ரீஜென்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 16 மாவட்டங்களில் 62,600 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்:

ஆகஸ்ட் 18 ஆம் தேதி கொலம்பியாவில் 6.3 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. பின் சற்று நேரத்தில் மீண்டும், 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பொகோட்டாவிலிருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.  வில்லவிசென்சியோ, புகாரமங்கா, துஞ்சா மற்றும் இபாகு நகரங்களிலும் உணரப்பட்டது. 

ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் டெசோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் உள்பட மொத்த 126 கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில், 20 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget