மேலும் அறிய

Uganda Terrorist Attack: உகாண்டா பள்ளியில் பயங்கரவாத தாக்குதல்.. 25 பேர் உயிரிழந்த அவலம்..

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு ஒன்று மேற்கு உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு ஒன்று மேற்கு உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள லுபிரிஹ மேல்நிலைப் பள்ளியில் (lhubiriha secondary school) இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

எல்லை நகரமான ம்போண்ட்வேயில் உள்ள ஒரு பள்ளியின் மீது ஜனநாயகப் படைகள் (allied democratic forces) நேற்று இரவு தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி தனியாருக்கு சொந்தமானது மற்றும் காங்கோ எல்லையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கு இருக்கும் மாணவர் விடுதியும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த விடுதியில் இருந்த உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாகவும், இதுவரை 25 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு புவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே மாணவர்களா என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வின்னி சிசா என்ற அரசியல் தலைவர் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் டிவிட்டர் பதிவில், “ இன்று காலை இப்படி அதிர்ச்சிகரமான செய்தி கேட்டது மிகுந்த வருத்ததிற்குரிய விஷயம். பள்ளியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படி பள்ளிகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஏற்க முடியாத ஒன்று. பள்ளி என்பது அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் எத்தனை பேர் இந்த தாக்குதலில் சிக்கியுள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. ஆனால் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் துரத்திச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இதே ஜனநாயக படை கிராமம் ஒன்றில் திடீர் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 1988-இல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் புகுந்த இந்த அமைப்பு, அங்குள்ள 80 மாணவர்களை உயிருடன் எரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது. உகாண்டாவில் காலம் காலமாக ஜனநாயக படை இது போன்ற தாக்குதல் நடத்தி வருவது அந்நாட்டிற்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget